districts

போட்டி தேர்வர்களுக்கு வலைத்தளம்

விழுப்புரம்,ஜன.20- விழுப்புரம் மாவட்டத்தில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவி கள் பயன்பெற மெய்நிகர் கற்றல் வலைதளம் உருவாக்கப் பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மோகன் தகவல் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- மெய்நிகர் கற்றல் வலை தளம் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினால் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டல் நிகழ்ச்சி கள், உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  இதுதவிர பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப் பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சி யாக தற்போது வீட்டில் இருந்த வாரே போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மெய்நிகர் கற்றல் வலைதளம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. அனைத்து போட்டித்தேர்வுக ளுக்கான விவரங்களை இந்த இணையதளம் உள்ளடக்கியது. போட்டித்தேர்விற்கான பாடத் திட்டங்கள், வினாத்தாள்கள், மாதிரித்தேர்வுகள், பாடக்குறிப்பு கள் ஆகியவை உள்ளன. மெய்நிகர் கற்றலுக்கான வலை தளம், இணையதளத்திலும் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் அனை வரும் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப் பட்டு ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல், நடப்பு நிகழ்வுகள், போட்டித்தேர்வு வகுப்புகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை தினமும் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரையும் செய்யப்படுகிறது. எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் இதனை பயன்படுத்தி அரசு பணி யிடங்களுக்கான போட்டித்தேர்வு களில் அதிகளவில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.