சென்னை, நவ. 8 - நிரந்தரப் பணிகளை பறிக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி செவ்வாயன்று (நவ.8) தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை 152, சமூக நீதியை மறுத்து, மாநகராட்சி, நகராட்களில் உள்ள நிரந்தரப் பணிகளை அழிக்கும் வகையில் உள்ளது. இதனை திரும்ப பெற வலியுறுத்தியும், 1.7.2022 முதல் 4 விழுக்காடு அகவிலைப் படி உயர்வை அறிவிக்கவும் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் ஒருபகுதியாக வடசென்னை மாவட்டம் சார்பில் சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அகவிலைப்படி, சரண் விடுப்பை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும், ஒப்பந்தம், புறஆதார முறைகளை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங் களை எழுப்பினர். மாவட்டத் தலைவர் பி.சுந்தரம்மாள் தலை மையில் நடைபெற்ற இந்தப் ஆர்ப்பாட்டத் தில் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, துணை பொதுச் செயலாளர் வாசுகி, மாநிலச் செயலாளர் டேனியல் ஜெயசிங், மாவட்டச் செயலாளர் ம.அந்தோணிசாமி, நிர்வாகிகள் பி.சீனிவாசுலு, வை.சிவக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.