புதுச்சேரி அரசு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அரசு தொலைபேசி கையேட்டினை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் வெளியிட்டார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் இலட்சுமிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் தீப்பாய்ந்தான், ராஜசேகரன் ஆகியோர் அதனைப் பெற்றுக் கொண்டனர். எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
