சென்னை, பிப்.28- தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட மாம்பலம் கால்வாயில் 48ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கோயில்கள் வெள்ளியன்று (பிப்.28) முழுவதுமாக இடித்துஅகற்றப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-117,தியாகராய சாலை, திரு.வி.க. குடியிருப்புப் பகுதி வழியாக மாம்பலம் கால்வாய் செல்கிறது. இந்த மாம்பலம் கால்வாயில் மழைக்காலங்களில் வெள்ளம் வரும் போது பாதிப்பு ஏற்படு கின்ற வகையில் 48 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டப்பட்டி ருந்த ரேணுகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் விநாயகர் கோயில்கள் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் காவல்துறை ஒத்துழைப்புடன் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது. சென்னைப் பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளத் தால் பாதிக்கப்படாமல் இருப்ப தற்காக ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்களில் நீர்நிலை களைத்தூர் வாருதல், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்தி,தடுப்புச் சுவர் மற்றும் கம்பிவேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-117, தியாகராய சாலையில் உள்ள மாம்பலம் கால்வாயின் கரையில் நீர் செல்லும் பாதையை ஆக்கிரமித்து 48வருடங்களாக ரேணுகா பர மேஸ்வரி அம்மன் கோயில் மற்றும் விநாயகர் கோயில் என இரண்டு கோயில்கள் இருந்து வந்தன. இதனால் மழையினால் நீர்வரத்து அதிகமாகும் போதெல்லாம் இப்பகுதிகளில் நீர் சரியாக செல்ல முடியாமல் வெளியேறி இதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகளான திரு.வி.க. குடியிருப்பு, கிரியப்பா சாலை, நக்கீரன் குடியிருப்பு, எம்.கே.ராதா நகர், எஸ்.எஸ்.புரம், பத்ரிகரை உள்ளிட்ட 20 குடியிருப்புப் பகுதிகளில் நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்ந்து மேற்கொண்ட முயிற்சி யின் காரணமாக இந்தக்கோயிலின் நிர்வாகிகள் ஒத்துழைப்புடன், கோவிலில் இருந்த அம்மன் மற்றும் விநாயகர் சிலைகளை அவர்களே அகற்றி எடுத்துக் கொண்டனர். மேலும், இதரக்கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள், பணியாளர்களால் அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்பகுதி மாம்பலம் கால்வாயை தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி, தடுப்புச் சுவர் அமைத்தும், அதன் மேல் குப்பை மற்றும் கழிவுகள் போடாத வகையில் கம்பிவேலி அமைத்தும் வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநக ராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.