districts

img

பழுதடைந்த போர்வெல் சீரமைப்பு - குடிநீர் விநியோகம்

திருச்செங்கோடு, பிப்.26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தால் எலச்சிபாளையம் அருகே பழுதடைந்த போர்வெல் சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. திருச்செங்கோடு வட்டம், எலச்சி பாளையம் அருகே கொண்ணையார் கிராமம் ஆயித்தாகுட்டையில் கரியாம் பாளையம் செல்லும் சாலையின் ஓரத் தில் ஆழ்துளை கிணறு கடந்த நாற் பத்தி மூன்று வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த ஆழ்துளைக் கிணறு கடந்த 2 வருட காலமாக பழு தடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.  இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.  இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நூதன போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆழ்துளை கிணற்றை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளை சந் தித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.