districts

img

கொரடாச்சேரி : ஸ்டாலின் பிரச்சாரத்தில் மக்கள் வெள்ளம்

திருவாரூர், மார்ச் 24 -  திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் உள்ள முத்தமிழறிஞர் கருணாநிதி நினைவு அரங்கத்தில் தஞ்சை மற்றும் நாகை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தலைமை வகித்தார். இந்தியா கூட்டணியின் தேர்தல் பிரச்சார மாபெரும் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் வை.செல்வராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்கள் ச.முரசொலி மற்றும் வை.செல்வராஜ் ஆகியோர் மாபெரும் வெற்றியை தருமாறு வாக்குச் சேகரித்தனர். நிறைவாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றினார்.  (ந.நி.)