districts

img

திருவண்ணாமலை மண் சரிவில் ஐந்து சடலங்கள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை, டிச. 2- திருவண்ணாமலை மண்சரிவில் உயிரிழந்தவர்க ளில் இதுவரை ஐந்து பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெஞ்சல் புயல் மழை காரணமாக திரு வண்ணாமலை மாவ ட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பியது. மாவட்டத்தில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், கலசபாக்கம் செங்கம் உள்ளிட்ட பகுதி களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் சாகு படி பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமானது.   இந்நிலையில் ஞாயி றன்று (டிச.1) மாலை திருவண்ணாமலை வ.உ.சி நகர் பகுதியில்  மலை யிலிருந்து ஓடைகள் வழி யாக வந்த மழை வெள்ளத்தின் போது மண் சரிவு ஏற்பட்டது. அதில் மலை பாறைகள் உருண்டு வந்து, மலையடிவார குடி யிருப்புகள் மீது விழுந்தது. இதில் மூன்று வீடுகள் பாதிக்கப்பட்டது. இந்த மண் சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. இதை யடுத்து திங்கள் அன்று     தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 35 வீரர்கள், திரு வண்ணாமலை மாவட்ட காவல் கமாண்டோ குழுவை சேர்ந்த 50 வீரர்கள்,  மாநில மீட்பு படையை சேர்ந்த 20 வீரர்கள், திரு வண்ணாமலை ஆயுதப் படை காவலர்கள் 40  பேர், மேலும் காவல் துறை சார்பாக 60 பேர்  என காவல்துறை சார்பாக மொத்தம் 170 பேர்  மீட்பு மற்றும் பாது காப்பு பணிகளில் ஈடுபடுத்தப்  பட்டனர். முன்னதாக மழை எச்சரிக்கையாக  மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் அனை வரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறி வுறுத்தி,  அமராவதி முருகை யன், சண்முகா தொழிற் சாலை பள்ளிகளில் உள்ள  நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்க ளுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப் பட்டது. மீட்பு பணியின் போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர்,  மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.   அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசிய போது, சம்பவ இடத்தில் பெரிய பாறை ஒன்று உருண்டு விழும் நிலை யில் உள்ளதால் அந்த பாறையை உடைத்து எடுக்க வும்,மண் சரிவை தடுக்கவும் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவன பேராசி ரியர்களும், பாறையை உடைத்து எடுக்கும் வல்லுநர் குழுவும் வந்து ஆய்வு செய்து பாறையை உடைத்து இடிபாடுகளில் சிக்கி யவர்கள் மீட்கப்படுவார்கள் என்றார்.