கடந்த 34 நாட்களாக தொடர்ந்து போராடிவரும் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு வேலூர் மாவட்டக்குழு சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மாவட்ட தலைவர் டி.முரளி தலைமையில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், மாவட்ட துணைத் தலைவர் எம்.காசி. இணை செயலாளர்கள் சி.சரவணன், வி.நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.