districts

img

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு: செப்.2 மின்வாரிய அலுவலகம் முற்றுகை

புதுச்சேரி, ஆக.29- புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு உயர்த்தியுள்ள மின்சார கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி செப். 2 அன்று மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று இடது சாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிவித்தனர். சிபிஎம் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், சிபிஐ மாநிலச் செய லாளர் அ.மு. சலீம்,விசிக மாநில செயலாளர் தேவ.பொழிலன், எம்.எல்.கட்சியின் மாநில கவுன்சில் உறுப்பினர் முருகன் ஆகி யோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஒன்றிய பாஜக அரசு, புதுச்சேரி மக்களை சோதனை எலிகளாக மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவிலேயே ரேசன் கடைகள் இல்லாத மாநிலமாக மாற்றியதே என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசின் சாதனை என்று விமர்சித்தனர். மின் துறையை தனியார் மயமாக்கும் பணிகையும் ஆளும் கூட்டணி அரசு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பலதரப்பட்ட மக்க ளின் எதிர்ப்பு போராட்டத்தால் மின்துறை ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்றும் இந்நிலை யில் கட்டணத்தை உயர்ந்திருப்பது, மறைமுகமாக மின்துறை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என்றும் கடுமையாக குற்றம் சாட்டினர். முழு அடைப்பு போராட்டம் புதுச்சேரி மக்களை பெரிதும் பாதிக்கும், மின்சார  கட்டண அறி விப்பை உடனடியாக திரும்பப் பெறக் கோரி  செப்டம்பர் 2 ஆம் தேதி உப்பளம் பகுதியில்  உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம். இதைத் தொடர்ந்து செப்.7க்கு பிறகு மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்று செய்திருப்பதாகவும் தெரி வித்தனர்.