court

img

பாகிஸ்தான் தொழிற்சாலைகளை தடை செய்ய வேண்டுமா?  - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்

காற்று மாசு விவகாரத்தில் பாகிஸ்தான் தொழிற்சாலைகளை தடை செய்யவே வேண்டுமாக என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். 
தலைநகர் டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு நான்கு வாரங்களாக விசாரித்து வருகிறது. நேற்றைய நடந்த விசாரணையின்போது, டெல்லி, என்சிஆர் பகுதியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் குறைக்க 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காற்று தர மேலாண்மை அமைப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதாடினார். அப்போது அவர் கூறுகையில், 'டெல்லி, என்.சி.ஆர் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகள் தான் காரணம். காற்று மாசுக்கும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,' எனக் கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 'நீங்கள் சொல்வதைப் பார்த்தால், பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளைத் தடை செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களா? உங்கள் குறைகளை காற்று தர மேலாண்மை ஆணையத்திடம் தெரிவியுங்கள், அவர்கள் தீர்வு வழங்குவார்கள்,' என காட்டமாக கூறி உள்ளார்.

;