சென்னை,ஜூன்.06- திருமணம் என்பது மட்டுமே, குடும்பத்தை உருவாக்காது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தனது விருப்பத்திற்கு மாறாக குடும்பத்தினர் தன்னை தடுப்பதாக 25 வயது பெண் தொடர்ந்த வழக்கு தொடர்ந்திருந்தார், அந்த வழக்கு விசாரணையில் தன்பாலின ஈர்ப்பார்களின் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் இல்லையே தவிர, அவர்கள் குடும்பமாக இருக்க முடியும். திருமணம் என்பது மட்டுமே, குடும்பத்தை உருவாக்குவது அல்ல என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
மேலும் அவர் விரும்பிய பெண்ணுடன் செல்ல உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லக்ஷ்மி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்துள்ளது.