கலாஷேத்ராவில் பாலியல் புகார் தெரிவித்த மாணவர்களை நிர்வாகம் தனித்தனியாக அழைத்து அச்சுறுத்த வருகிறது. புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம், அதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. இதனை கண்டித்து இன்று காலை கலாஷேத்ரா முன்பு போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.