மாஸ்கோ, ஆக. 18 - ரஷ்யா கடந்த ஆக. 11 அன்று விண்ணில் செலுத்திய லூனா-25 எனும் விண்கலம் அன்று நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்துள்ளது. அதன் திட்டப்படி, ஆகஸ்ட் 21ஆம் நாள், நிலவின் தென் துருவத்தில் இந்த விண்கலம் மென்மையாகத் தரையிறங்க வுள்ளது. இவ்விண்கலம் வெற்றிகரமாகத் தன் இலக்கை அடைந்தால் லூனா-25 மனித வரலாற்றில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ள முதல் விண்கலம் என்னும் பெருமையைப் பெறும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் சந்திரயான் - 3 விண்கலமும் நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு செய்யவே ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.