ரஷ்ய புரட்சி நடந்தது முதலே பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் மிக அதிக எச்சரிக்கையுடன் இருக்கத் துவங்கியது. இங்கும் ஏதாவது நடந்துவிடுமோ என்று - குறைந்தது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாவது உருவாகிவிடுமோ என்று - இந்திய அரசாங்கம் அஞ்சியது. அதனால் அரசாங்கம் தனக்கு ஒரு மத்திய ரகசிய புலனாய்வுத் துறையை புதிதாக உருவாக்கியது. பல்வேறு பிரதேசங்களில் இருந்த அரசியல் ஊழியர்களின் செயல்களை மிக கவனமாக கண்காணித்து வந்தது. ஆனாலும் எங்களது லட்சியம் இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிக்க வேண்டும் என்பதாக இருந்தது.
- முசாபர் அகமது-