world

img

பிரேசிலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி  

பிரேசிலில் 30 தொழிலாளர்களுடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.    

பிரேசிலில் கேம்போஸ் ஜெரைஸ் நகரில் உள்ள கிளபின் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பணியாளர்களை ஏற்றிக்கொண்டு தொழிற்சாலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது புதன்கிழமை இரவு கனமழை காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அதனைதொடர்ந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  

இதையடுத்து இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

;