பெய்ரூட்,ஜன.3- ஜனவரி 2 அன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹமாஸ் அலுவலகத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.இதில் 6 பேர் உயிரி ழந்ததாகவும், இறந்தவர்களில் ஒருவர் ஹமாஸ் இயக்கத்தின் அர சியல்பிரிவின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி என அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படு கிறது. ஹமாஸ் அமைப்பின் அரசியல் மற்றும் இராணுவப் பிரிவுகள் மற்றும் பிற பாலஸ்தீன ஆதரவு பிரிவுகள் மற்றும் பிராந்தியக் குழுக்களை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகித்து வந்ததன் காரணமாக ஹமாஸ் அமைப்பில் மிகவும் முக்கியமான நபராக இவர் இருந்தார்.
மேலும் இவர் மேற்குக் கரை யில் உள்ள அல்-கஸ்ஸாம் படைப் பிரிவின் பொறுப்பாளராக இருப்ப தாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியது. எனவே தான் அல்-அரூரி இஸ்ரேலின் முக்கிய இலக்காக இருந்ததாகவும், பல ஆண்டுகளாக இஸ்ரேல் இவரை கொலை செய்ய முயற்சித்து வந்த தாகவும் தெற்கு லெபனானை சேர்ந்த பத்திரிகையாளர் ஹஷேம் கூறியுள்ளார். லெபனான் பகுதியில் உள்ள ஹமாஸ் தலைவர்களை தாக்கி னால் இஸ்ரேல் பெரும் விளைவு களை சந்திக்கும் என ஹிஸ் புல்லா தலைவர் ஏற்கனவே எச்ச ரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த படுகொலை நடந்துள்ளது.
ஸ்ரேல் நடத்தியுள்ள இந்த கொலை போரை மேலும் தீவிர மாக்கும் சூழலை உருவாக்கி யுள்ளது. இந்நிலையில் ஹமாஸ் தலை வர்களை படுகொலை செய்வதன் மூலம் இஸ்ரேல் நெருப்புடன் விளையாடுகிறது. போரை விரிவுபடுத்த இஸ்ரேல் தொடர்ந்து முயற்சிக்கிறது.ஆனால் ஹிஸ் புல்லா இயல்பாகவே இஸ்ரே லுக்கு பெரும் சேதத்தை ஏற் படுத்தக்கூடிய ஒரு சக்திவாய்ந்த எதிரியாகும். மரண முகாமாக இருக்கும் காசாவிற்குள் உள்ள ஹமாஸ் படையை இஸ்ரேலால் தோற்கடிக்க முடியாவிட்டால், அவர்களால் மிகப் பெரிய எதிரியை சரியான முறையில் எதிர் கொள்ள முடியாது.
இதன் கார ணமாக வலிமையான ஹிஸ்புல்லா விடம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரணியா கலேக் என்ற தனியார் பத்திரிகை யாளர் தெரிவித்துள்ளார்.