world

img

உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது ஈவிரக்கமற்ற குண்டுமழை

காசா, மார்ச் 1 - காசாவில் உணவுப் பொருட்களுக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் 112  பேர்களை இஸ்ரேல் ராணுவம் மிகக்கொடூர மான முறையில் படுகொலை செய்திருப்பதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இஸ்ரேல் மதிக்காத நிலையில், ஐக்கிய நாடுகள் அவை உள்ளிட்ட சர்வதேச சமூகம் இந்தப் பிரச்சனையில் உறுதியான நிலைபாட்டை எடுக்க வேண்டும்; பாலஸ்தீன மக்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் 2023 அக்டோபர் 7 அன்று துவங்கி தற்போது வரை கொடூரமான போரை நடத்தி வரு கிறது. இதுவரை 25 ஆயிரம் குழந்தைகள் - பெண்கள் உட்பட 30 ஆயிரம் பேரை குண்டு களுக்கு பலியாக்கி இருப்பதுடன், காசா பகு திக்கு குடிநீர், உணவு, மருந்துகள் என அனை த்து வாழ்வாதார பொருட்கள் செல்வதையும் தடுத்து நிறுத்தி விட்டது. ஐ.நா. அமைப்பு மூல மாக வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை யும் கூட இஸ்ரேல் ராணுவம் தடுத்து வரு கிறது. ஐ.நா.வின் நிவாரணப் பொருட்கள் ஏற்றிச்சென்ற டிரக்குகளுக்கும் தீவைத்தது.

இவ்வாறு கடந்த ஒரு மாதமாக காசாவில் உணவுப் பொருட்கள் எதுவும் கிடைக்காதபடி செயற்கைப் பஞ்சத்தை இஸ்ரேல் உருவாக்கி யது. பால் இல்லாமல் 2 மாத பச்சிளம் குழந்தை இறந்த செய்தி உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இவ்வாறான சூழலில்தான் பிப்ரவரி 29 அன்று மாலை 4.30 மணி (காசா நேரப்படி) அள வில் ரொட்டி தயாரிப்பதற்கு தேவையான மாவை ஏற்றிக்கொண்டு தென்மேற்கு காசாவில் உள்ள  அல்-ரஷித் தெருவிற்குள் வந்த டிரக்குகள் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். மாதக் கணக்கில் பட்டினி கிடக்கும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக திரண்டனர்.

அப்போதுதான், அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் பீரங்கிகள், துப்பாக்கிகள், வாகனங்களின் மீது பொருத்தப்பட்டிருக்கும் கனரக துப்பாக்கிகள் என அங்கு வைத்திருந்த அனைத்து வகையான ஆயுதங்கள் மூலமாகவும் குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் கொடூரப் படுகொலையை அரங்கேற்றியுள்ளது.

முதல் சுற்று தாக்குதல் முடிந்த பிறகு, இனி தாக்குதல் நடக்காது என்று நம்பி, மக்கள் உணவுக்காக மீண்டும் டிரக்குகளை நோக்கி சென்றபோது, ஈவிரக்கமற்ற இஸ்ரேல் ராணுவம் இரண்டாம் சுற்று தாக்குதலை   நடத்தி யதுடன், செத்து விழுந்த பாலஸ்தீனர்களின் உடல்கள் மீது பீரங்கிகளையும் ஏற்றியுள்ளது. இது உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

சர்வதேச நாடுகள் கண்டனம்
பாலஸ்தீன ஜனாதிபதியாக உள்ள முகமது அப்பாஸ் மற்றும் பாலஸ்தீன அமைச்சர்கள் இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனங் களை தெரிவித்துள்ளனர்.  

“உதவிக்காகக் காத்திருந்த பாலஸ்தீனர் களை இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் படைகள் கொடூரமாக தாக்கியுள்ளதை நாங்கள் கண்டிக் கிறோம்” என்று ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.   

“சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்க இஸ்ரேலைக் கட்டாயப்படுத்த  உறுதி யான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்” என சவூதி அரேபியா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்தவோ பெட்ரோ இஸ்ரேலிடம் இருந்து ஆயு தங்கள் வாங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். 

சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், இஸ்ரேலின் தாக்கு தலை கடுமையாகக் கண்டித்துள்ளார். இஸ்ரேல் போர் முடிவுக்கு வரவும்; பொதுமக்களின் பாது காப்பு மற்றும் மனிதாபிமான உதவியை உறு திப்படுத்தவும் சீனா அழைப்பு விடுத்துள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

புதுதில்லி, மார்ச் 1 - இஸ்ரேல் ராணுவத்தால் பாலஸ்தீனர்கள் 112 பேர் கொல்லப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காசா நகரத்தில் இஸ்ரேலியத் துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 112 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டி ருக்கின்றனர். பலர் காயம் அடைந்திருக்கின்றனர். இதற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தமது அதிர்ச்சியையும், கண்டனத்தை யும் தெரிவித்துக் கொள்கிறது. அந்தப் பகுதியில் உணவுப் பொருள்களை ஏற்றி வந்த டிரக்குகளிலிருந்து பட்டினி கிடக்கும் மக்கள் உணவுப் பொருள்களை சேகரித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் மீது இந்த இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இவ்வாறு இஸ்ரேலால், காசா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தாக்குதலில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர்.  இவ்வாறு இனப்படுகொலை நடந்துகொண்டி ருக்கும்போது இதுகுறித்து ஒரு வார்த்தைகூட கூறாது இந்திய அரசு வாளாவிருப்பது மிகவும் வருந்தத் தக்கது.

காசா மீதான இஸ்ரேல் யுத்தத்தில் அமெரிக்க அரசாங்கம் பின்பற்றும் நிலையையே  மோடி அர சாங்கம் பின்பற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். காசா பகுதியில் நடைபெற்றுவரும் யுத்தத்தை உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்துவதற்காக தென்  ஆப்பிரிக்கா, பிரேசில், அரபு நாடுகள் போன்று உலக தெற்கு நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுடன்  மோடி அரசாங்கமும் உடனடியாக தன்னை ஒருங்கிணைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.