காசா,ஆக.1- காசா பகுதியில் தோல் நோய்த்தொற்றுகள் மிக வேகமாகப் பரவி வருகின்றது. இஸ்ரேல் ராணுவம் காசா வின் ஒட்டு மொத்த சுகாதாரக் கட்டமைப்பையும் அழித்து விட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களு க்கு போதிய மருத்துவ உத விகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனர்கள் முழு மையாக இஸ்ரேலின் நிவார ணப் பொருட்களை மட்டுமே நம்பியுள்ளனர். இந்நிலை யில், தொடர் தாக்குதல்கள், திட்டமிட்டு ஐ.நா. நிவாரண வாகனங்களை தடுத்து வைத்திருப்பது போன்ற காரணங்களால் காசாவில் நீர், உணவு, மருந்துகள், கிருமி நாசினிகள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
ஊட்டச்சத்தின்மை, உடலை தூய்மைப்படுத்திக் கொள்ள முடியாத சூழல் உள்ளிட்ட காரணங்களால் காசா வில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடுமையான சுகாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சமீப வாரங்களில் தோலில் தொற்று நோய் ஏற்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் மிக குறுகிய இடங்களில் தஞ்சம் அடைந்து இருப்பதால். இந்த தோல் தொற்று நோய் கள் மிக வேகமாகப் பரவி வருகிறது.
மேலும் போலியோ நோய் மீண்டும் உருவாகும் ஆபத் தான சூழலும் உருவாகியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவன கூற்றுப்படி பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 2 லட்சத்தி ற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் அம்மை, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிய வந்துள்ளது.
தாக்குதல்களால் படுகொலையாவது போலவே தொற்று நோய்களால் பலியாகும் பாலஸ்தீனர்கள் எண் ணிக்கையும் அதிகமாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.