world

img

அகதிகள் வெளியேற ஒரு மாதம் கெடு: பாகிஸ்தான் முடிவிற்கு ஐநா எதிர்ப்பு

பாகிஸ்தான் அரசு தனது நாட்டில் முறையான ஆவ ணங்கள் இன்றி பதிவு செய்யப்படாத 10 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் நவம்பர் 1க்குள் வெளியேற வேண்டும் என்றும் இது அரசாங்கத்தின் எந்த ஒரு அழுத்தமும் இன்றி தன்னார்வத்து டன் அவர்களாக  மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் இந்த உத்தரவிற்கு ஐநா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மேலும் 40 ஆண்டுகளாக அகதிகளுக்கு பாதுகாப்பு அளித்து வந்த பாகிஸ்தான் அரசு, அகதிகளை வெளியேற்றாமல் இருக்க புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.  பாதிக்கப்பட்டு அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களிடம் போதுமான ஆவ ணங்கள் ஏதும் முறையாக இருக்க வாய்ப்பில்லை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் அகதிகளின் பாது காப்பை உறுதிப்படுத்த பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகளுக்கு ஐநா அகதி கள் அமைப்பு ஆதரவு அளிக்க தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.  செப்டம்பர் மாதம் கராச்சி நகரில் மட்டும் 700 ஆப்கானியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.தவிர நாட்டின் பல நகரங்க ளில் பலநூறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.    ஐ.நா. புள்ளிவிபரங்களின்படி, சுமார் 13 லட்சம்  ஆப்கானியர்கள் பதிவு செய் யப்பட்ட அகதிகள் மேலும் 8,80,000 ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் தங்குவ தற்கான சட்டப்பூர்வ அந்தஸ்தையும்  பெற்றுள்ளனர்.