இஸ்லாமாபாத், செப்.14- பாகிஸ்தானுக்கான பொது தேர்தலை நவம்பர்-6 அன்று நடத்த அந்நாட்டின் ஜனாதிபதி ஆரிப் அல்வி தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவுக்கு பரிந்துரை செய்துள்ளார். பாகிஸ்தான் அரசியலமைப்பின் 48 (5)ஆவது பிரிவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 90 நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்குகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை ஆகஸ்ட் 5 அன்று நவாஸ் ஷெரிப் அரசு வெளியிட்டது. இதை தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் எல்லை நிர்ணயம் செய்ய அட்டவணையை அறிவித்தது. எனவே தேர்தல் தேதி மாற வாய்ப்புள்ளது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல்கள் சட்டம் 51, 218, 219, 220 மற்றும் 2017 ஆகிய வற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து அரசியலமைப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்பதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். அரசியலமைப்பின் தொடர்புடைய விதிகளின் கீழ் மாகாண அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்தா லோசித்து, தேசிய மற்றும் மாகாண சட்டசபைகளுக்கு பொதுத் தேர்தலுக்கான ஒரே தேதியை அறிவிக்க உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதலைப் பெறலாம் என்று கூறப் பட்டுள்ளது.