world

img

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தாய்லாந்தின் புக்கெட் தீவில் இருந்து தில்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், விமானம் மீண்டும் புக்கெட்டில் அவசர அவசரமாக தரையிறப்பட்டது.

ஏர் இந்தியா விமானம் ஒன்று, தாய்லாந்தின் புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8 மணியளவில் தில்லிக்கு புறப்பட்டது. இதில் 156 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த சூழலில், ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து விமானிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், தில்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனை பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, விமானத்தில் சோதனை நடத்தினர். தீவிர சோதனைக்கு பிறகு, விமானத்தில் எந்த வெடி குண்டும் இல்லை என  உறுதிப்படுத்தப்பட்டது.