துபாய், டிச.13- துபாயில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காப்-28 காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்ற கிட்டத்தட்ட 200 நாடுகளின் பிரதிநிதிகள், பருவ நிலை மாற்றத்தின் மோசமான விளை வுகளைத் தவிர்க்க, புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மாற்று எரிபொ ருட்களுக்கு செல்ல முதன்முறையாக ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். மாநாட்டின் இறுதி நாளில் அறிக்கை தொடர்பான முரண்பட்ட கருத்துக்க ளின் காரணமாக நிர்ணயிக்கப் பட்ட நேரத்தைத் தாண்டி, பேச்சு வார்த்தைகள் நீண்டு அறிக்கை ஏற்றுக் கொள்வது தாமதமானது. இம்மாநாட்டிலும் 2050 ஆம் ஆண்டில் கார்பன் உமிழ்வை நிகர பூஜ்ஜியமாக மாற்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகி மாற்று எரிபொருள் நோக்கி செலுத்தல் என்பதை அழுத்தமாக பேசாமல் அதை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டதை போல இம்மாநாடு விலகி நின்று கொண்டதாக விமர்சகர் கள் கூறுகின்றனர்.
படிம எரிபொருள் மானியங்களை படிப்படியாக நிறுத்துவது பற்றி பேசப் பட்டுள்ளது. புதைபடிவ எரிபொ ருட்கள் பயன்பாட்டில் இருந்து படிப்படி யாக வெளியேற்றாமல் 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை எவ்வாறு அடைவது என்பது குறித்த எந்த தெளிவையும் இம்மாநாடு முன்வைக்கவில்லை. அதே வேளையில் காலநிலை பேரழி வுகளால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்ய வளரும் நாடுகளுக்கு 10,000 கோடி டாலர்கள் வழங்க வேண்டும் என மாநாட்டிற்கு முன்பிருந்து இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடு கள் கொடுத்து வந்த அழுத்தத்தால் பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டுள் ளன. எனினும் நிதி கையாளுதல் குறித்தான விதிகள் இன்னும் அறி விக்கப்படவில்லை. காலநிலையால் அதிகம் பாதிக்கப்படும் ஆப்பிரிக்கா மற்றும் சிறிய தீவு நாடுகளுக்கு இந்நிதி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநாட்டு ஒப்பந்தத்தில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இலக்கை இறுதி செய்யாததால் உலக வெப்பநிலையில் 2 டிகிரி செல்சியஸ் உயர்வைக் கூட இது தடுக்கத் தவறி விடும் ஆபத்தை உள்ளடக்கியுள்ளது என காலநிலை ஆர்வலர்கள் கூறு கின்றனர்.
உலகில் அதிகளவு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதல் 10 இடத்தில் உள்ள சவூதி அரேபியா மட்டுமே காலநிலை மாற்றம் தொ டர்பான ஐக்கிய நாடுகளின் கூட்ட மைப்பின் உறுப்பினராக உள்ளது. மற்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அழுத்தமே இந்த மாநாட்டின் மோசமான வெளிப்பாடுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் காலநிலை செயல்பாட்டாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா எண்ணெய் மற்றும் எரி வாயு பயன்பாட்டைத் தொடர விரும்பு கின்றன. வளர்ந்து வரும் பொருளாதா ரங்களான இந்தியா மற்றும் சீனா, தங்கள் பொருளாதாரத்தின் முதுகெ லும்பான புதைபடிவ எரிபொருட்களை படிப்படியாக அகற்றுவதில் தயக்கம் காட்டுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் புதை படிவ எரிபொ ருட்களுக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிச் செல்வதற்கு பெரும் லாபத்தை மட்டுமே நோக்க மாக கொண்ட பணக்கார நாடுகள் தொழில்நுட்பங்களை காப்புரிமை இல்லாமல் வழங்கத் தயாராக இல்லை. இது சூரிய ஆற்றல் மற்றும் காற்றாற்றல் உள்ளிட்ட ஆற்றல்க ளுக்கு வளரும் நாடுகள் மாறுவதை தடுக்கும்.
முறையான தொழில்நுட்ப பரி மாற்றம் இல்லாதது,புதைபடிவ எரி பொருட்களில் இருந்து விரைவில் வெளியேறுவதற்கான அழுத்தமோ அல்லது தெளிவான வழிகாட்டுதல்க ளோ இல்லாதது பணக்கார நாடு கள் வளரும் நாடுகளுக்கு நிதி வழங்கி னாலும் அது பூஜ்ய கார்பன் உமிழ்வை நோக்கி உந்தித் தள்ளுவதை குறைக்கிறது. மேலும் அறிவியல் ரீதி யாக எதிர்பார்த்தபடி இந்த மாநாட் டின் முடிவுகள் அமையவில்லை என துபாய் மாநாடு குறித்தான அதி ருப்தியை சமூக செயல்பாட்டாளர்க ளும் ஆராய்ச்சியாளர்களும் தெரி வித்துள்ளனர்.