ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கடலோர காவல்படை விமானம் மீது மோதிய விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஹொக்கைடோவில் உள்ள நியூ சிட்டோஸ் விமான நிலையத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அந்த விமானம் சி ஓடுபாதையில் தரையிறங்கியது. அதே சமயத்தில், ஜப்பான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய சில பொருட்களுடன் கடலோர காவல்படை விமானம் ஒன்று ஓடுபாதையில் சென்று கொண்டிருந்து. அந்த விமானத்தின் மீது ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மீது மோதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கடலோர காவல்படை ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 379 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.