ஹைத்தி புரட்சி (1791-1804) அடி மைகளின் எழுச்சி, நாட்டு விடுதலைக்கான புரட்சிகர யுத்தமாக மாறியது. பிரெஞ்ச் மற்றும் ஸ்பெயின் காலனி ஆதிக்கத்தை முறிய டித்து ஜனவரி ஒன்றில் முதல் அமெரிக்க கருப்பு இன மக்களின் குடியரசாக ஸ்தா பிக்கப்பட்டது.
கியூபப் புரட்சி- பிடல் காஸ்ட்ரோ தலை மையில் புரட்சிகர இயக்கம், அமெரிக்க ஆதரவு பெற்ற பாடிஸ்டா சர்வாதிகாரி ஆட்சியை வீழ்த்தியது.
முதலாளித்துவம் மற்றும் காலனி ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு அடையாளமாக 1959 ஜனவரி 1-ல் சோசலிச கியூபா உதயமானது. மெக்சிகோ- சபாடிஸ்டாஸ் என்பது, மெக்சிகோவின் தெற்கு மாநிலமான சியாபாஸில் கணிசமான பகுதியில் ஆதிக்கம் செலுத்திய தீவிர இடதுசாரி அரசியல் மற்றும் ராணுவ குழு. இந்த ராணுவ குழு மார்க்கோஸ் தலைமையில் 1994 ஜனவரி ஒன்றில் நவீன தாராள மயக் கொள்கைகளை பின்பற்றிய மெக்சிகோ அரசு மீது எழுச்சியுடன் யுத்தம் அறிவித்த நாள்.
தொழிலாளி வர்க்க வெற்றிகள் - 2023
H 2023 ஜனவரி 1-ல் தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் தொழிலாளர் கட்சித் தலைவர், முற்போக்காளர் லூலா டா சில்வா ஜனாதிபதியாக பொறுப்பேற் றார். தேர்தலில் தீவிர வலது சாரியான ஜெய்ர் போல்சானரோவை தோற்க டித்தார்.
H2023 ஜூன் மாதம் தென்னாப்பி ரிக்காவில் எஸ்காம் என்ற பொதுத்துறை மின்சார கம்பெனியுடன் நும்சா, தென்னாப்பிரிக்க உலோகத் தொழிலா ளரின் தேசிய சங்கம் செய்த ஒப்பந்தம் மூலம் சிறந்த ஊதிய உயர்வு, அலவன்ஸ் மற்றும் மொத்த தொகை பெற்றனர்.
Hஅமெரிக்காவில் ஐந்து லட்சத்திற்கு மேல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். கிட்டத்தட்ட 10 லட்சம் அமெ ரிக்கர் இரட்டை இலக்கத்தில் ஊதிய உயர்வு பெற்றனர். அமெரிக்காவின் மூன்று பெரிய ஆட்டோ மொபைல் கம்பெனி தொழிலாளர் ,ஜெனரல் மோட் டார்ஸ், போர்டு மற்றும் ஸ்டெல்லாண் டிஸ், ஹாலிவுட் நடிகர்கள், கலைஞர்கள், லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சல்சில் ஓட்டல் தொழிலாளர், கெய்ஸர் பெர்மனன்டே யின் சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தவர்களில் முக்கியமான வர்கள்.
H 2023 அக்டோபரில் மனிதகுலம் சந்திக் கும் பிரச்சனைகள் குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு தென்னாப்பிரிக்கா வின் ஜோகன்னஸ்பர்க் மாநகரில் கூடியது. முதலாளித்துவ நெருக்கடிக்கு சோசலிச மாற்று குறித்து மாநாடு விரி வாக விவாதித்தது.
Hகாசா மற்றும் மேற்கு கரையில் பாலஸ்தீ னர்கள் மீது 2023 அக்டோபர் ஏழு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படு கொலை, ஏகாதிபத்தியம் மற்றும் காலனி ஆதிக்கத்தின் அட்டூழியம் மற்றும் கொ டூரத்தை அம்பலப்படுத்தி உள்ளது. இதைக் கண்டித்து எழுந்த பிரம்மாண்ட மான எதிர்ப்பலை, நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் பாலஸ்தீனர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். காசாவில் உடனடி போர் நிறுத்தம் கோரி போராடுகின்றனர். 2023 நவம்பர் 4-ல் 100க்கும் மேற்பட்ட பெருந்திரள் பேரணி கள், வேலைநிறுத்தங்கள் உலகம் முழு வதும் நடைபெற்றன. வாஷிங்டனில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தெருக்களில் இறங்கி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடினர்.
தொடரும் உக்ரைன் போரும், ரஷ்யாவுக்கு சாதகமான நிலையும்
நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணைய உக்ரைன் விண்ணப்பித்ததா லும், இது ரஷ்யப் பாதுகாப்பிற்கு அச்சு றுத்தல் என்பதாலும் 2022 பிப்ரவரி 24-ல் உக்ரைனின் மீது ரஷ்யா படையெடுத்தது. அமெரிக்காவோடு நடைபெறும் இந்த மறைமுக யுத்தத்தில் ரஷ்யாவின் கை ஓங்கியே உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 2024-ல் மீண்டும் தேர்தலை சந்திக்கும் நிலைமையில், உக்ரைன் யுத்தம் குறித்து பாசாங்கு செய்கிறார். 2022க்கு முன் இருந்த பொருளாதார வளர்ச்சியை தற்போது ரஷ்யா எட்டி யுள்ளது. ஆண்டு வளர்ச்சி 3.5 சதவிகித மாக வேகம் அடைந்துள்ளது.
கோடிக்க ணக்கான ரஷ்ய மக்களின் வருமானம், வாங்கும் சக்தி, வாழ்க்கை தரம் உயர்ந்துள் ளது. வேலையின்மை குறைவாகவே உள்ளது. மேற்கத்திய நாடுகளின் பொரு ளாதார தடைகள் மற்றும் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் முறிய டிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவால் திணிக்கப்பட்டதே இந்த யுத்தம். 2022ல் உக்ரைன் மீது படை யெடுப்புக்கு முன் ரஷ்ய ராணுவ நடவடிக்கைகளின் ஐந்து நோக்கங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டன.
அவை:- ரஷ்ய மக்களின் பாதுகாப்பு, உக்ரைனின் நாஜி ஆதரவாளர்களை அகற்றுவது, உக்ரைனின் ராணுவ பலம் அதிக ரிப்பதை தடுத்து நிறுத்துவது, உக்ரை னில் ஒரு நேசகரமான ஆட்சி ஏற்படுத்த முயற்சிப்பது, நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடாது. ஆனால், பினாமி யுத்தம் நடத்தும் அமெரிக்காவின் நோக்கம், ராணுவ ரீதியாக வெற்றி பெறுவதும், ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதுமே ஆகும். ராணுவ ரீதியாக ரஷ்யாவை தோற்க டிக்க முடியாது; ரஷ்ய நலன்கள் அங்கீக ரிக்கப்பட்டே ஆக வேண்டும். தோல்விக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகள், ரஷ்யா போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என வற்புறுத்துகின்றன.
போர் நிறுத்தம் என்றால் சின்னாபின்னமான உக்ரைனை புதுப்பிக்க கால அவகாசம் கிடைக்கும்; பின் வாசல் வழியாக உக்ரைனை நேட்டோவில் இணைக்க முடியும். அமெரிக்கா விரிக்கும் வலையில் ரஷ்யா சிக்காது. ரஷ்யா தனது ராணுவ பலத்தை மேலும் வலுப்படுத்திட முடிவு செய்துள்ளது .உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் செய்து வரும் ராணுவ சப்ளை குறைந்து வருகிறது. ரஷ்யா மென்மேலும் நவீன ஆயுதங்களை உக்ரைனில் பயன் படுத்தி வருகிறது. 2024 இறுதிக்குள் நிலை மைகள் ரஷ்யாவிற்கு சாதகமாகவே திரும்பும்.
பலுச்சிஸ்தான் படும்பாடு
2023 நவம்பர் 23-ல் பலுச் சிஸ்தானில் 24 வயது இளைஞர் உட்பட நான்கு பேரை பாகிஸ்தானின் பயங் கரவாத எதிர்ப்பு இலாகா சுட்டுக்கொன்றது. பலுச்சிஸ்தான் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், பெரும் திரள் ஆர்ப்பாட்டங்கள் டிசம்பர் 6 -ல்துவங்கின. நூற்றுக்கணக்கான பலுச்சிஸ் தான் பெண்கள் அரசின் சட்டவிரோத படு கொலைகளைக் கண்டித்து தலைநகரம் இஸ்லாமாபாத் வரை 1600 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டனர். டிசம்பர் 20-ல் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
லத்திகள் கொண்டு தாக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கா னோர் கைதாகினர். பலுச்சிஸ்தானில் அரசின் நிர்ப்பந்தம் காரணமாக, பலர் காணாமல் போய்விட்ட னர். இவர்களை கண்டுபிடிக்க ,ஐநா விசாரணை குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும்; பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; பயங்கரவாத எதிர்ப்பு இலாக்காவை கலைக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். பலுச்சிஸ்தானை காலனி போல் நடத்தக் கூடாது என்றனர். சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10இல், காணாமல் போனவர்க ளின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஆயி ரக்கணக்கானோர், குவெட்டா நகர் நோக்கி பேரணி நடத்தினர். இடதுசாரி அவாமி தொழிலாளர் கட்சியும் ,இடது ஜனநாயக முன்னணியும் போராளிகளுக்கு ஆதரவும் ஒருமைப்பாடும் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் மனித உரிமை கமிஷன் , உயிர் வாழும் உரிமையை பாகிஸ்தான் அரசு பாதுகாக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளது. 2011 ஜனவரியில் இருந்து 2023 ஜனவரி வரை 9000 பேர் காணவில்லை என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.