பனாஜி 55ஆவது இந்திய சர்வதேச திரைப் படத் திருவிழா பாஜக ஆளும் கோவா மாநில தலைநகர் பனாஜியில் (நவம்பர் 20 முதல் 28 வரை) நடைபெற்று வருகிறது. “இளம் திரைப்பட தயாரிப்பாளர்கள் - எதிர்காலம்” என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இந்த சர்வதேச திரைப்படத் திருவிழாவில் 81 நாடுகளில் இருந்து 180 சர்வதேச திரைப்படங்கள் திரை யிடப்பட்டு வருகின்றன.
காவி அரங்கம்
சர்வதேச அளவிலான அறிஞர்கள், எழுத் தாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பங்கேற்றுள்ள இந்த கோவா சர்வதேச திரைப் பட விழாவை மோடி அரசு இந்துத்துவா கொண் டாட்டக் களமாக மாற்றியுள்ளது. ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC) தலைமையேற்று நடத்தும் இந்த சர்வ தேச திரைப்பட விழாவை பிரதமர் மோடிக்கு நெருக்கமான போலிச்சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் துவங்கி வைத்தார். சர்வதேச திரைப்பட விழா வின் திரையிலும், வெளிப்புறத்திலும் ராமர், ஹனுமான், மகாவிஷ்ணு உள்ளிட்ட கட வுள்களின் வடிவங்களும் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக கோவா சர்வதேச திரைப்பட விழா அரங்கு முழுவதும் காவி வண்ணம் பூசப்பட்டு இருந்தது.
சாவர்க்கர் திரைப்படம்
சுதந்திரப் போராட்டத்தின் பொழுது பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு எழுதிக் கொடுத்து தண்டனை தளர்வு பெற்றவரும், மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஒரு குற்றவாளியுமான சாவர்க்கரை நாயகனாகச் சித்தரித்த “சுதந்திர வீர் சாவர்க்கர்” இந்திய பனோரமாவின் (இந்திய சர்வதேச திரைப்பட விழா) தொ டக்கப் படமாக திரையிடப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியும், நேதாஜி, அம்பேத் கர், பகத்சிங் ஆகியோர் சாவர்க்கரின் உபதேசப் படியே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங் கேற்றனர் எனவும் சர்ச்சைக்குரிய காட்சிகள் “சுதந்திர வீர் சாவர்க்கர்” திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்துத்துவா கொண்டாட்டம்
இந்திய திரையுலகில் மண்ணை கவ்விய, 370-ஆவது சட்டதிருத்தத்தை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீரை மோதல் நிலமாக்கிய மோடி அரசாங்கத்தின் செயல்பாட்டை நியாயப் படுத்தும் “ஆர்டிகிள் 370” என்ற இந்தி திரைப் படம், மஹாவிஷ்ணுவின் அவதாரங்களின் கதை யான “மஹாவதார் நரசிம்மா” என்ற 3டி அனிமே ஷன் திரைப்படம், ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரப் படமான “கல்கி” 2898 ஏடி” என்ற தெலுங்கு திரைப் படம், கொங்கணின் விநாயகர் திருவிழாவை மையப்படுத்தும் “கரத் கணபதி” என்ற மராத்தி திரைப்படம் உள்ளிட்ட இந்துத்துவாவை போற் றும் திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
சர்வதேச திரைப்பட விழாவை இந்துத்துவா கொண்டாட்டக் களமாக மாற்றிய மோடி அரசின் செயல்பாட்டிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.