world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சமூக ஊடகங்களில் பாசிசக்  கருத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை 

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பாசிச கருத்துக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெனிசுலா நாடாளுமன்ற தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். இடதுசாரி தலைவரான மதுரோ மூன்றாவது முறை யாக வென்ற பிறகு  தீவிர வலதுசாரிகள் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் சமூக ஊடகங்களில் பாசிசக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இந்நிலையில் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

பிறந்து 4 நாட்களேயான குழந்தைகளை கொன்ற இஸ்ரேல் 

காசாவில் பிறந்து 4 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது. அபு அல்-கும்சன்  என்பவர்தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளின்
பிறப்புச் சான்றிதழ் வாங்கச் சென்றிருந்த போது அவர்களது தங்குமிடம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அவரதுமனைவி ஜூமானா அராஃபா, அவரது தாய்,குழந்தைகள் உட்பட அனைவருமே இஸ்ரேலின்இந்தத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டு விட்டனர்.

புயல் மழை காரணமாக 7 லட்சம் பேர் பாதிப்பு 

புயல் மழை, அதனால் உருவான பெரும் வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக இரண்டு மாதத்தில் மட்டும் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் 7லட்சத்துக்கும்  அதிகமான மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனை  ஐ.நாவின் துணை செய்தித்தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக்  தெரிவித்துள்ளார். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், காங்கோ ஜனநாயக குடியரசு, லைபீரியா,நைஜர், நைஜீரியா, மாலி, டோகோ ஆகிய
நாடுகளில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.