world

img

முகாமில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது குண்டுவீசிய இஸ்ரேல்

காசாவின் ஜபாலியா அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்திருந்த அப்பாவி பாலஸ்தீனர்களின் மீது அமெரிக்கா தயாரித்த 6 டன் எடை கொண்ட குண்டை இஸ்ரேல் ராணு வம் வீசி 50க்கும் மேற்பட்டவர் களை கொலை செய்துள்ளது.  

செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேல் ராணுவம் அகதிகள் முகாம் மீது குண்டு வீசியதை   மனி தாபிமான குழுக்கள் கடுமையாக கண்டித்துள்ளன.மேலும் காசாவில் போர் நிறுத்தத்தை உறு திப்படுத்த உலகத் தலைவர்களை  இந்த தாக்குதல் “விழித்தெழச் செய்ய வேண்டும்” என்றும்  தெரி வித்துள்ளன.

ஜபாலியா முகாமுக்கு அருகி லுள்ள இந்தோனேசிய மருத்துவம னையின் இயக்குநர் இந்த தாக்கு தலில் குறைந்தது 50 பேர் கொல்லப் பட்டதாகவும் நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.இந்த தாக்குத லில் அல் ஜசீரா ஒளிபரப்பு பொறியா ளர் ஒருவரது குடும்பத்தைச் சேர்ந்த 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீன தொலைத் தொடர்பு நிறுவனமான பால்டெல், காசா முழுவதும் மீண்டும் தகவல் தொ டர்பு மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரி வித்துள்ளது. காசா பகுதியில் உள்ள மருத் துவமனைகள் பெருமளவு இஸ்ரேல் குண்டுவீச்சினால் செயல் பட முடியாத நிலையில் முறை யான சிகிச்சைகள் கொடுக்க முடி யாத வகையில் முடக்கப்பட்டு உள் ளன.அதனால் இந்த  தாக்குதலில் காயமடைந்த பல நூறு பாலஸ் தீனர்கள் எகிப்து மருத்துவமனை களில் சிகிச்சை பெறுவதற்காக ரஃபா எல்லை வழியாக வியாழக் கிழமையன்று வெளியேற அனு மதிக்கப்பட்டு வருகிறார்கள். முதற்கட்டமாக படுகாயமடைந்த 90 பாலஸ்தீனர்களும், வெளி நாட்டை சேர்ந்த 450 பேர்களும் எகிப்துக்குள் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.