world

காசா மீது இஸ்ரேல் போர் : சில முக்கிய கள நிகழ்வுகள்

  1.  பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை தடுக்க தவறியதால் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழக தலைவர் ராஜினாமா செய்ய இஸ்ரேலிய சக்திகளால் நிர்ப்பந்திக் கப்பட்டுள்ளார்.  
  2. அமெரிக்காவின் அனைத்து அறிவுரை களையும் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை என இஸ்ரேலின் அமைச்சர் பென் விர் கூறியுள்ளார். அமெரிக்காவின் கொடியில் நாங்கள் இன்னொரு நட்சத்திரம் இல்லை எனவும் கூறியுள்ளார். எனினும் இஸ்ரேலை தடுக்க அமெரிக்கா தயாராக இல்லை.  
  3.  காசா மக்களை எடுத்து கொள்ள காங்கோ மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுடன் பேச்சு  வார்த்தை நடப்பதாக இஸ்ரேலிய பத்திரிகை கள் செய்தி வெளியிட்டுள்ளன.  
  4. இஸ்ரேல் காசா பகுதியில் இதுவரை 65,000 டன் குண்டுகளை வீசியுள்ளது. இதன் விளைவுகள் 1945ஆம் ஆண்டு நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணு குண்டைவிட அதிகமானது என ஆய்வா ளர்கள் தெரிவிக்கின்றனர்.
  5. காசா போரில் இதுவரை 12,500 இஸ்ரே லிய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  6.  அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் ஊடுரு விய ஹமாஸ் படையினர் குழந்தைகளின் தலைகளை வெட்டினர் எனவும் பெண் களை பாலியல் பலாத்காரம் செய்தனர் என வும் இஸ்ரேல் கூறியது. இதனை மேற்கத்திய ஊடகங்களும் பரப்பின. இந்தியாவில் பர்கா தத் போன்ற ஊடக வியலாளர்கள் கூட பிரதிபலித்தனர். இந்த செய்திகளுக்கு தகுந்த ஆதாரம் இல்லை என தனது உதவியாளர்கள் கூறிய பின்ன ரும் அமெரிக்க ஜனாதிபதி பைடன் இதனை அமெரிக்க மக்களுக்கு தனது உரையில் கூறினார். ஆனால் இதுவரை இதற்கான ஒரு சிறு ஆதாரம் அல்லது சாட்சியத்தை கூட இஸ்ரேலிய காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.  
  7.  ஹமாசின் முக்கிய தலைவர் அல் அரோரி யை  லெபனானில் கொலை செய்ததன் மூலம் இஸ்ரேல் பெரிய தவறு செய்து விட்டது; இதற்கு நாங்கள் பதிலடி தர முடிவு செய்தால் அந்த போரில் எவ்வித வரை யறையும் விதிகளும் இருக்காது என ஹெஸ்புல்லாவின் தலைவர் சயீத் நர்சல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.  
  8.  ஹமாஸ் வசம் இன்னும் 136 பணயக்கைதி கள் உள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை கூறுகிறது. உண்மை எண்ணிக்கை எவ்வ ளவு என்பது எவருக்கும் அதிகாரப்பூர்வ மாக தெரியவில்லை.  
  9. புதிய குடியுரிமை சட்டவிதிகள் அடிப்படை யில் ஏராளமான இஸ்ரேலிய அரேபியர் களை இஸ்ரேல் நாடு கடத்தப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன.  
  10.  அந்தோணி பிளிங்கன் வீடு முன்பு போர் எதிர்ப்பு செயல்பாட்டாளர்கள் ஒன்று  கூடி “பிளிங்கன் போர் வெறியன்” என வும் “காசா போரை நிறுத்து” எனவும் “இஸ்ரேலுக்கு ஆயுத உதவி தராதே” என வும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி னர். இத்தகைய எந்த ஆர்ப்பாட்டங்களும் அமெரிக்க உயர் அதிகாரிகளை அசைப்ப தாக தெரியவில்லை.  
  11.  ஏமனின் ஹவுதிக்கு எதிராக உருவாக்கப் படும் பன்னாட்டு கப்பற்படையில் தங்களது போர் கப்பல் அனுப்ப மாட்டோம் என பல்கேரியா அறிவித்துள்ளது. பல முயற்சி களுக்கு பின்னரும் 12 நாடுகள் மட்டுமே அமெரிக்காவின் முயற்சிக்கு இசைந்துள்ளன.  
  12.  ஹமாஸ் தலைவர் அல் அரோரியை கொன்றதன் மூலம் இஸ்ரேல் தனது நெருக்கடியை வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்ய முயல்கிறது என ஹமாசின் தலைவர் கலேத் மஷல் கூறியுள்ளார். இந்த செயல் மூலம் ஹெஸ்புல்லா மற்றும் ஈரானை போரில் ஈடுபடவைத்து அதன் மூலம் அமெரிக்காவை போரில் நேரடியாக பங்கேற்க இஸ்ரேல் முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.