world

img

இஸ்ரேலுடனான உறவை முறித்துக் கொள்வதாக பொலிவியா அறிவிப்பு

லா பாஸ், நவ.1- அக்டோபர் 7 முதல் காசாவில் இஸ்ரேல் ராணுவம்  நடத்தி வரும் போர்க்  குற்றங்களை சுட்டிக்காட்டி இஸ்ரேலுடனான  அரசு முறை உறவுகளை துண்டி த்து விட்டதாக பொலிவியா அறி வித்துள்ளது. 

அக்டோபர் 31 அன்று, பொலி வியா அரசு இந்த முடிவை  அறிவித்த பிறகு  இஸ்ரேலுட னான உறவைத் துண்டித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடாக மாறியுள்ளது. இதற்கு முன்ன தாக 2009 ஆம் ஆண்டில், காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தன நடவ டிக்கைகளை கண்டித்து பொலி வியா ஜனாதிபதி ஈவோ மொ ரேல்ஸ், இஸ்ரேலுடனான உறவு களைத் துண்டித்தார். இருப்பி னும் அதன் பிறகு பொலிவியா வில் சதியின் மூலம் ஆட்சிக்கு வந்த ஜீனைன் அனெஸின் தலை மையிலான வலதுசாரி அரசாங் கம் 2019 இல் உறவுகளை மீண்டும் புதுப்பித்திருந்தது.

ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸின் நிர்வாக அதிகாரிகள், இந்த முடிவு “காசா பகுதியில் நடத்தப் படும் ஆக்கிரமிப்பு மற்றும் நியா யமற்ற வகையிலான இஸ்ரேல் இராணுவத்தின்  தாக்குதலை யும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை  நிராகரித்து அச்சு றுத்துவதையும் கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். “பாலஸ்தீன மக்களின் மீதான இனப்படுகொலைத் தாக் குதலை  தடுக்கவும், பாலஸ் தீனம் தனது சுயநிர்ணய உரிமை யை நிலைநாட்டவும், அவர்களது நிலத்தில் சட்டவிரோத ஆக்கிர மிப்புகள் இல்லாமல் இறை யாண்மை மற்றும் சுதந்திரமான அரசை அமைத்துக் கொள்ள வும், சுதந்திரத்தின் பண்புகளை முழுமையாக அனுபவிக்க  ஒரு உறுதியான தீர்வை வகுக்க வேண்டும்” என்றும் செவ்வாய்க் கிழமையன்று ஜனாதிபதி லூயிஸ், ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு வேண்டுகோள் விடுத் துள்ளார்.”