world

img

என்ன செய்யப் போகிறார் ஜோ பைடன்?

ஜி-20 உச்சி மாநாட்டிற்காக வரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியாவில் சிறிய அணு உலைகளை நிறுவுவது தொடர்பான அணுசக்தி ஒப்பந்தம், ஜெட் இயந்திர தயாரிப்பு தொழில்நுட்பங்க’ளை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், முதன்முறை யாக இந்திய பயணத்தை மேற்கொள்ளும் ஜோ பைடன், அமெரிக்க முதலாளிகளுக்கு இந்தியாவில் வர்த்தகக் கதவுகளை அகலத் திறந்து விடுவதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது, ஜெனரல் எலக்ட்ரிக் (GE) மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆகியவை இணைந்து இந்தியாவில் GE ‘F-414’ ஜெட் இஞ்சினை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டன. இந்த இஞ்சின் போர் விமானங் களில் பயன்படுத்தப்படுகிறது. 

அதேபோல இந்தியாவின் கண் காணிப்பு திறன்களை வலுப்படுத்தும் நோக்கில், குறிப்பாக சீனாவுடனான அதன்  எல்லையில், கண்காணிப்பை தீவிரப்படுத்து வதற்கு என்ற பெயரில் ‘MQ-9B’ பிரிடேட்டர் டிரோன்களை அமெரிக்காவிடம் இருந்து பெறுவதற்கும், ஜெனரல் அட்டாமிக்ஸ் உடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்த  ஆளில்லா விமானங்களானது ஏவுகணை களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்நிலையில்தான், வாஷிங்டன் பேச்சு வார்த்தையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக ஜோ பைடன், தனது இந்தியப் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்கா குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொதுவாக, ஜி-20 உச்சிமாநாட்டின் போது இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதில்லை. ஆனால், இதிலிருந்து  அமெரிக்க ஜனாதிபதி மற்றும் சவூதி இளவர சருக்கு இந்தியா விதிவிலக்கு அளித்துள்ளது. அந்த அடிப்படையிலேயே, அமெரிக்க  ஜனாதிபதி ஜோ பைடனுடன், ஏற்கெனவே பேசப்பட்ட, அணுசக்தி மற்றும் பாது காப்புத்துறை சார்ந்த ஒப்பந்தங்கள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

சிவில் அணுசக்தி பொறுப்புச் சட்டத்திற்குப் பிறகு உருவான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான வேறுபாடுகளை இந்தியாவும் அமெரிக்காவும் களைய வேண்டும் என்று நம்புவதாகவும், இரு தரப்புமே அதிக மூலதனம் மிகுந்த பெரிய  அணு உலைகளுக்கு செல்வதை விட,  சிறிய அணு உலைகளை அமைப்பதற் கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கை யெழுத்திடுவது என்றும் தீர்மானித்துள்ள தாக கூறப்படுகிறது. இந்தியாவில் 6 அணு உலைகளை அமைக்கும், இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) மற்றும் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கம்பெனி (WEC) இடையேயான பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை, அவை கடந்த ஜூன் மாதம் இரண்டு நாடு களும் விவாதித்தவைதான். தற்போது, அடுத்த தலைமுறை சிறிய மாடுலர் ரியாக்டர் தொழில்நுட்பங்களை உருவாக்குவது பற்றிய விவாதத்தில் வேகம் காட்ட உள்ளன.  லைட் காம்பாட் ஏர்கிராப்ட் Mk2-க்காக  இந்தியாவில் GE F-414 ஜெட் என்ஜின் களை தயாரிப்பதற்காக ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் இடையே ஜூன் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.   எனினும், இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த வாரம்தான் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து GE  F-414 ஜெட் என்ஜின்களை தயாரிப்ப தற்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இரு நாடுகளும் தீவிரமாகியுள்ளன.

GE F-414 ஜெட் இஞ்சின் ஒப்பந்தம் தவிர, இரு தரப்பும் ஒரு “விநியோக பாது காப்பு ஏற்பாடு” மற்றும் “பரஸ்பர பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தம்” ஆகியவை குறித்த பேச்சுவார்த்தையையும் நடத்த உள்ளன. மிகவும் சக்திவாய்ந்த டிரோன்களான- ஜெனரல் அட்டாமிக்ஸ் MQ-9B HALE UAV என்ற டிரோன்களை வாங்குவதற்கான திட்டங்களை இந்தியா தெரிவித்த பிறகு, ஒரு  விரிவான உலகளாவிய பராமரிப்பு, பழுது பார்ப்பு, மாற்றியமைத்தல் (MRO) வசதியை நிறுவும் திட்டத்தைப் பற்றி இரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர். இவை பற்றியெல்லாம் ஜோ பைடனின் இந்தியப் பயணத்தின் போது உறுதியான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, இந்திய மாணவர்களுக் காக அறிவியல், தொழில்நுட்பப் பொறி யியல் மற்றும் கணிதம் தொடர்பான (STEM) ஒருவருட முதுநிலைப் பட்டப்படிப்பை வழங்குவது குறித்தும்; இதில் நிபுணத்துவம் பெறும் மாணவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் தங்கி அங்கு பணிபுரியும் வாய்ப்பை பெறுவது குறித்தும் பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியர்களின் தற்காலிக வேலை களுக்கான விசாக்களை அமெரிக்கா புதுப்பிக்கும் விவகாரத்தில், உறுதியான இறுதிசெய்யப்பட்ட தேதி மோடி - பைடன் சந்திப்பின்போது அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இவற்றைத் தாண்டி, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சிண்டு முடியும் ஒரு திட்டத்தையும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ  பைடன் தன்வசம் வைத்துள்ளார். ரஷ்யா வின் யுத்த நடவடிக்கையால் உக்ரைன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, அதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக உதவி களை வழங்க வேண்டும் என்பதுதான் அது.