world

img

இஸ்ரேல் - சவூதி அரேபியா உறவு மேலும் சிக்கலாகிறது

ரியாத், மார்ச் 8- இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையேயான உறவுகளை சமநிலைப்படுத்த அமெரிக்கா முயன்று வந்தது. இந்நிலையில் இஸ்ரேலின் அடாவடித்தனத்தால் அது மேலும்  மோசமான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. பிப்.29 அன்று உணவு தேடி வந்த பாலஸ்தீனர் கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு நடத்தி படு கொலை செய்ததற்கு சவூதி அரேபியா கடுமை யான கண்டனம் தெரிவித்தது. அதோடு சர்வதேச சட்டங்களை இஸ்ரேல் கடைப்பிடிக்க வேண்டும், போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.  இஸ்ரேலுக்கும் சவூதிக்கும் இடையே இணக்கத்தை உருவாக்க 2020 ஆம் ஆண்டு ஆபிரகாம் ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா முயன்று வருகிறது. இதனை மையப்படுத்தி இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பிய பொரு ளாதார வழித்தடம் திட்டத்தை கொண்டு வந்தது. மேலும் இந்த இணக்கத்திற்காக பல சூழ்ச்சிக ளையும் நெருக்கடிகளையும் உருவாக்கி வரு கிறது. எனினும் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் இனப்படுகொலை தாக்குதலால் அரே பியாவுடன் ஏற்படுத்தி வந்த இணக்கத்தில் மீண்டும் பிளவு உருவாகி வருகிறது.   ஜி-20 அமைப்பின் அமைச்சர்கள் கூட்டம், முனிச் பாதுகாப்பு மாநாடு, இஸ்லாமிய ஒத்து ழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், ஐ.நா உள்ளிட்ட  சர்வதேச அமைப்பு களின் கூட்டங்களில் அரேபிய பிரதிநிதிகள் முன்னெடுத்த இஸ்ரேலின்  இனப்படுகொலை க்கு எதிரான வாதங்கள் இதனை தெளிவுபடுத்து வதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரி வித்துள்ளனர்.  மத்திய கிழக்கு நாடுகளுக்கு  அழுத்தம்  உலகெங்கிலும் உள்ள அரேபிய மக்கள் இஸ்ரேலின் மீதும் அமெரிக்காவின் மீதும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதோடு இந்த இனப்படுகொலையை தடுக்க தங்கள் அர சாங்கம் தீவிரமான நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி வரு கின்றனர். இதற்காக சவூதி, ஜோர்டான், இராக், எகிப்து உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் மாபெரும் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.  இந்நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கைக ளுக்கு எதிராக இருப்பதாகக் கூறினாலும் பொரு ளாதார உறவுகளில் இஸ்ரேலை பகைத்துக் கொள்ளாமல் செயல்படுவது, அமெரிக்காவின் கட்டளைகளுக்கு உடன்படுவது எனச் செயல்படு கின்றன. இந்த நடவடிக்கைகள் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வரும் சூழலில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக இஸ்ரேலுடன் தங்கள் உறவுகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்கு அந்நாடு கள் தள்ளப்பட்டுள்ளன.