வறுமையைப் போக்க செலவு செய்யுங்கள்
ஜி-7 நாடுகள் ஆயுதங்களுக்கு செய்யும் செலவில் ஒரு பகுதியை உலகளவில் ஏற் பட்டுள்ள வறுமையை நீக்க செலவு செய்ய வேண்டும் என ஆக்ஸ்பாம் நிறுவனம் வலி யுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள வறுமையைப் போக்க ஆண்டுக்கு 3,170 டாலர்கள் தேவை. ஆனால் ஜி-7 நாடுகள் வெறும் 400 டாலர்கள் தான் ஒதுக்கீடு செய்கின் றன.ஆனால் அதுவே ராணுவத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி டாலர்கள் செலவு செய்கின்றன.
படகு கவிழ்ந்து 49 புலம்பெயர்ந்தோர் பலி
ஆப்பிரிக்காவிலிருந்து ஏமனை நோக்கி 260 க்கும் மேற்பட்ட புலம்பெயர் மக்களை ஏற்றிச் சென்ற படகு ஏமன் கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 குழந்தைகள், 39 பெண்கள் உட்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 140 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்க ளை தேடும் பணி நடப்பதாக புலம் பெயர்ந்தோ ருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. வாழ்வாதாரம் இழந்த ஆப்பிரிக்க மக்கள் புலம் பெயர்ந்து செல்லும் போது மரணமடைவது தொடர் சம்பவமாக உள்ளது.
கருப்புப் பட்டியலில் சூடான் படைகள்
குழந்தைகளின் மீதான தாக்குதல், கொலை உள்ளிட்ட வன்முறைகளை ஏவுவதன் காரணமாக சூடான் நாட்டின் ராணுவம் மற்றும் அதிரடிப்படை ஆகிய இரண்டையும் கருப்புப் பட்டிய லில் இணைத்துள்ளது ஐ.நா அவை. முன்னதாக இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன குழந்தைகள் மீது நடத்தி வரும் வன்முறையின் காரணமாக அவற்றை கருப்புப் பட்டியலில் இணைத்தது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டு ஆயுத மோதலின் காரணமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 21% அதிகரித்துள்ளது.
மலாவி துணை ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்தில் பலி
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவியின் துணை ஜனாதிபதி சவ்லோஸ் சிலிமா விமான விபத்தில் பலியானார். அவருடன் சென்ற 9 நபர்களில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டின் ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா உறுதிப்படுத்தியுள்ளார். அந்நாட்டின் தலைநகரில் இருந்து மசுசு சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த போது ஏற்பட்ட மோசமான வானிலையின் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய அமெ.ஜனாதிபதி மகன் குற்றவாளி
அமெரிக்க ஜனாதிபதி பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன் படுத்தியது மற்றும் போலி ஆவணங்கள் மூலம் துப்பாக்கி வாங்கி 11 நாட்கள் வைத்திருந்தது என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தற்போது கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில் அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்ட னை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.