world

img

“அசமத்துவமே அமெரிக்க கொரோனா உயிரிழப்புகளுக்குக் காரணம்”

லண்டன், பிப்.9- பொருளாதார ஏற்றத்தாழ்வுகளே பணக்கார நாடுகளிலேயே அதிக அளவு கொரோனா உயிரிழப்பு ஏற்பட்ட நாடாக அமெரிக்கா மாறிய தற்குக் காரணம் என்று லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் பற்றி கார்டியன் நாளிதழ் விரிவான ஆய்வுக்கட்டு ரையை வெளியிட்டிருக்கிறது. அதில் தடுப்பூசிகள் மக்களுக்குக் கிடைப் பது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ளும் திறன்கள் உள்ளிட்டவை பற்றி ஆய்வு செய் யப்பட்டுள்ளன. அதோடு, உலக நாடு கள் எவ்வாறு தங்களை தயார் படுத்திக் கொண்டன என்ற விபரங்க ளையும் தொகுத்து ஆய்வு மேற்கொள் ளப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைத் தாண்டிவிட்டது. அமெரிக்க அரசு வட்டாரங்களின்படி, இந்த உயிரி ழப்புக்கு குடிமக்களே காரணம் என்று சொல்லப்படுகிறது. உயிரிழந்தவர்க ளின் மீதே பழி சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் வருமானத்தில் காணப்படும் பெரும் ஏற்றத்தாழ்வு மற்றும் தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்காமல் இருப்பது ஆகிய அம்சங்களை கார்டியன் இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு ஒன்றிய நாடு என்ற முறையில் முன்னெச்சரிக்கையுடனான செயல் பாடு, தொடர் ஏற்பாடுகள் போன்ற வற்றை பெருந்தொற்றிற்கு எதிராக அமெரிக்கா எடுக்கவில்லை. மாறாக, பொறுப்பு தனிநபர்கள் மீது விழுந்துள்ளது. அசமத்துவம் கொண்ட வருமானம், மோசமான உடல்நலன் மற்றும் கடுமையான அரசியல் பிளவுகள் ஆகியவை உள்ள நாட்டின் நிலைமை கவலைக் குரியதாக மாறியுள்ளது என்று தனது ஆய்வுக்கட்டுரையில் கார்டி யன் இதழ் குறிப்பிட்டுள்ளது. ஒட்டுமொத்த அமெரிக்கா முழு வதும் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை அனைத்து மக்களுக் கும் ஏற்பாடு செய்துத் தருவதில் அமெரிக்கா தோல்வியடைந்துள் ளது. தேசம் தழுவிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் பெருந்தொற்றை எதிர்கொள்ளத் தேவைப்பட்டன. அதை அமெரிக்க நாட்டின் தலை வர்களால் தரமுடியாமல் போய் விட்டது. பணக்கார நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்காவில் தான் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது. அதுவும் உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை தடுப்பூசி கள் நடைமுறைக்கு வந்தபிறகு ஏற் பட்டவை என்று அந்த ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.