சியோல், மார்ச் 11- தென் கொரியாவில் பணி இடங்களில் உள்ள மோசமான சூழலை சரி செய்ய வலியுறுத்தி போராடி வரும் பயற்சி மருத்து வர்களின் மருத்துவ உரிம அட்டை யை ரத்து செய்யும் பணியை தென் கொரியா அரசாங்கம் முன் னெடுத்துள்ளது. தென் கொரியாவில் மருத்து வர்களின் அடிப்படை தேவைக ளையும் மருத்துவ கட்டமைப்பை யும் மேம்படுத்த முயற்சிகளை எடுக்காமல் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை அந்நாடு அறி வித்துள்ளது. ஏற்கனவே பணி அழுத்தத்தில் உள்ள இளநிலை மற்றும் உதவி மருத்துவர்களின் மீது இந்த திட்டத்தால் கூடுதலாக பணி சுமை திணிக்கப்படும் என 8000 க்கும் அதிகமான மருத்து வர்கள் பிப்-20 முதல் வேலைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பல மருத்து வர்கள் தங்கள் பணியை ராஜி னாமா செய்துள்ளனர். நாட்டின் சுகாதாரத் துறை மொத்தமாக ஸ்தம்பித்துள்ளது. இதனை கையாள்வதற்காக ராணுவ மருத்துவர்களை சில இடங்களில் பணியமர்த்தியுள்ளது அரசு. அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தாமல், பணிக்கு திரும்பவில்லை என்றாலும், போராட்டத்தை முடிக்கவில்லை என்றாலும் மருத்துவ உரிமத்தை ரத்து செய்வோம் என அரசு மிரட்டி வந்தது. இந்நிலையில் 4,900 இளநிலை மருத்துவர்களின் மருத்துவ உரிமங்களை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்ய பணிகளை துவங்கியுள்ளது. இந்த அறிவிப்புகளை 4,900 மருத்துவர்களுக்கும் அனுப்பி யுள்ளதாக அந்நாட்டு சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருக்கி றோம் என்று அரசு தரப்பு கூறிக் கொண்டே போராடி வரும் மருத்து வர்களின் கோரிக்கையை ஏற்காமல் அவர்களை மீண்டும் பணியில் அடைப்பதில் மட்டுமே முனைப்பை காட்டி வருகிறது.