world

img

ஆப்கனில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு: மனித குலத்திற்கு எதிரான குற்றம்

ஐ.நா. சிறப்புத் தூதர் கருத்து

2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானை  கைப்பற்றியபிறகு நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தொடர்ந்து  விதித்து வருகின்றனர்.குறிப்பாக பெண்களின் கல்வி, வேலை, தனிமனித சுதந்திரத்தை கடுமையாக முடக்கும் அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். ஐ.நா செய்தியாளர் மாநாட்டில் ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி தொடர்பான தற்போதைய நிலை குறித்து விவாதித்தபோது, “ஆப்கானிஸ்தானில்  பெண் குழந்தைகளுக்கு  கல்வி மறுக்கப்ப டுவதும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை மறுப்பதும் பாலினப் பாகுபாடு ஆகும். இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக கருதப்பட வேண்டும். மேலும் இது சர்வதேச  குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும்” என்று  உலகளாவிய கல்விக்கான  ஐ.நா சிறப்புத் தூதுவரும் முன்னாள் இங்கிலாந்து

பிரதமருமான கோர்டன் பிரவுன் கோரியுள்ளார்.  நாட்டை கைப்பற்றிய பிறகு தலிபான்கள்   வெளியிட்ட 80 ஆணைகளில் 54 ஆணைகள்  பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளின்  உரிமைகளை பறிப்பதாக மட்டுமே உள்ளது.  பொது இடங்களுக்குச் செல்வதற்கும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் பெண்கள்  பங்கேற்பதற்கும் தடை விதித்துள்ள தலிபான்கள் பெண்கள், தங்களின்  குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளுக்கு சென்று பிரார்த்தனை செய்யக் கூட சமீபத்தில் தடைகளை கொண்டு வந்துள்ளனர்.  இந்த காரணங்களிற்காக பாலினப் பாகுபாட்டை மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக   “சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  அங்கீகரிக்க வேண்டும் என்றும் இந்த குற்றத்திற்கு காரணமானவர்களை கைது செய்து வழக்குத் தொடர வேண்டும்” என்று பிரவுன் வலியுறுத்தினார். தலிபான்கள் ஆட்சியில் மகளிர் விவகார அமைச்சகம் “பெண்களின் நலன்  காக்கவும் அவர்களுக்கு எதிரான குற்றங் களை தடுப்பதற்கும் அஞ்சும் அமைச்சக மாக” மாற்றப்பட்டுள்ளது என்றும் ஆப்கானி ஸ்தானின்  சுதந்திரமான  மனித உரிமைகள் ஆணையமும்  கலைக்கப்பட்டுவிட்டது என பிரவுன் கூறியுள்ளார்.