சிரியா மீதான தடைகளை தளர்த்தும் அமெரிக்கா
சிரியா மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்த துவங்கியுள்ளது. டொனால்டு டிரம்ப் தனது மத்திய கிழக்கு பயணத்தின் போது சிரியா மீதான தடைகளை தளர்த்துவதாக கூறி இருந்தார். அதனைத் தொடர்ந்து சிரியா மீதான நிதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் ஒரு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிரியாவில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் நிவாரண உதவிகள் வழங்க ஐநா வேண்டுகோள்
காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு இன்னும் அதிக மனிதாபிமான உதவிகள் வழங்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதுகாப்பு என்ற பெயரில் நிவாரண வாகனங்களை தடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சென்று சேருவதை தாமதப்படுத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனர்களின் தேவை கடலளவு உள்ள நிலையில் 90 வாகனங்களில் அனுப்பிய உதவி போதாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடை உத்தரவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. டிரம்ப்பின் உத்தரவால் அங்கு பயிலும் 800 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உட்பட 6,800 மாணவர்களின் கல்வி கேள்விக்குறி யாகியுள்ளது. இவர்கள் உடனடியாக வேறு பல்கலைக்கழகங்களுக்கு அல்லது அமெ ரிக்காவை விட்டு வெறியேற வேண்டும் என்ற கட்டாயம் உருவாகியுள்ளது.
ரஷ்யா - பெலாரஸ் எல்லையில் ஜெர்மனி ராணுவம்
நேட்டோ நாடுகளின் கிழக்கு எல்லைப் பகுதி நாடான லிதுவேனியாவின் பெலாரஸ் உடனான எல்லையில் ஜெர்மனி ராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நேட்டோ நாடுகளின் எல்லைப்பகுதிகளை பாதுகாப்பது என்ற பெயரில் பெலாரஸ் மற்றும் ரஷ்ய எல்லைக்கு அருகில் இந்த ராணுவம் நிரந்தரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக ஜெர்மனி வெளிநாட்டில் நிரந்தரமாக தனது ராணுவத்தை நிலை நிறுத்துகின்றது.
சாம்சங் மீதும் வரி பாய்கிற
இந்தியா உட்பட வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் போன்களுக்கு டிரம்ப் அறிவித்த 25 சதவீத வரி சாம்சங் உட்பட இன்னும் சில நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு வர திட்டமிடும் என அவர் கனவு காண்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இனப்படுகொலை வரலாற்றை திரிக்க பொய்களை கட்டவிழ்த்து விடும் டிரம்ப்
வாசிங்டன்,மே 24- அமெரிக்காவிற்கு சென்ற தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ராமபோசா அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது தென்னாப்பிரிக்காவில் “வெள்ளையின இனப்படுகொலை” நடப்பதாகக் கூறி பொய்யான தகவலை பரப்பியுள்ளார். டிரம்ப்பின் இந்த குற்றச்சாட்டுகளை தென் னாப்பிரிக்க ஜனாதிபதி ராமபோசா உறுதியாக மறுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடக்கும் குற்றங்களில் கருப்பின மக்களே அதிக பாதிப்பு க்கு உள்ளாகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளையின மக்கள் இனவெறி கொள்கைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறும் கருத்தையும் அவர் நிராகரித்துவிட்டார். தென்னாப்பிரிக்காவின் நிலச் சீர்திருத்த சட்டத் தை விமர்சித்து வந்த, டிரம்ப் அரசு அந்நாட்டிற்கு வழங்கி வந்த எய்ட்ஸ் நிவாரண நிதியுதவியை நிறுத்தியுள்ளது. இவ்வாறு கடந்த சில வாரங்க ளாக தென்னாப்பிரிக்காவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றது. ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் இறையாண்மை யை நிலைநாட்ட முயலும்போதெல்லாம் அமெ ரிக்கா பொருளாதார அழுத்தத்தையும் அரசியல் தலையீட்டையும் பயன்படுத்தி அந்நாடுகளை ஒடுக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது தென்னாப்பிரிக்கா மீது டிரம்ப் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடு களும் ஆப்பிரிக்க நாடுகள் முழுவதிலும் இருந்த கறுப்பின மக்களை அடிமைகளாக்கி அடிமை வர்த்தகம் செய்தனர். காலனித்துவம் மூலமாக ஆப்பிரிக்க மக்களின் வாழ்வாதாரத்தை அழித்த இந்நாடுகள் இன்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள் நாட்டு போரைத் தூண்டிவிட்டு அந்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடித்துக் கொண்டு நவ-காலனித்துவ சுரண்டலை அரங் கேற்றி வருகின்றன. இத்தகைய வரலாற்று உண்மைகளை மழுங் கடிக்க, தென்னாப்பிரிக்காவில் “வெள்ளையினப் படுகொலை” நடக்கின்றது என கட்டுக்கதையை பரப்பியுள்ளார் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. உண்மையில் டிரம்ப் காட்டிய படம், காங்கோ நாட்டில் எடுக்கப்பட்ட காணொலியில் இருந்து எடுக்கப்பட்ட படமாகும். இந்த உண் மையை காணொலியை எடுத்த பத்திரிகையாளரே அம்பலப்படுத்தியுள்ளார். ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் வீடியோ பத்திரிகை யாளர் ஜாஃபர் அல் கதான்தி அந்த படம் தான் எடுத்த காட்சியின் ஒரு பகுதி எனவும் காங்கோ வில் உள்ள கோமா என்ற நகரில் உள்நாட்டு யுத்தத்தை நடத்திவரும் எம்-23 என்ற பயங்கர வாத அமைப்பின் தாக்குதலுக்கு படுகொலையா னவர்களின் உடல்களை மீட்டு எடுத்துச் சென்ற போது எடுத்த புகைப்படம் என தெரிவித்துள்ளார். அந்த படத்தை வைத்து வரலாற்றையே திரிக் கும் வகையில் டிரம்ப் மிக மோசமான பொய்யைக் கூறியுள்ளார். மேலும் இது அமெரிக்காவின் வர லாற்றுக் குற்றங்களை மறைக்கும் முயற்சி. ஆப்பி ரிக்கக் கண்டத்தில் கருப்பின மக்களுக்கு எதிராக நூற்றாண்டுகளாக இனப்படுகொலை செய்த மேற் கத்திய நாடுகளின் குற்றங்களை மறைக்கவே இன்று டிரம்ப் இத்தகைய பொய்க் கதைகளை உருவாக்குகிறார் என கடுமையான முறையில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.