ரஷ்யா குற்றச்சாட்டு மாஸ்கோ, ஜூலை 26- பதிவு செய்யப்படாத மருந்து களின் பயன்பாட்டுக்கு ஆப்பிரிக்க மக்களைக் கொண்டு அமெரிக்கா சோதனை செய்யத் திட்டமிட்டுள்ள தாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் ராணுவம் பல்வேறு வகையான ஆயுதங் களைத் தயாரித்து வருகிறது. இந்த ஆயுதங்களைத் தயார் செய்வ தற்குப் பல நாடுகளில் சோதனைக் கூடங்களையும் அமைத்துள்ளது. அந்தந்த நாடுகளில் உள்ள மக்க ளையே பரிசோதனைக்கும் பயன் படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள் என்று அம்பலமாகியுள்ளது. இதை ரஷ்யாவின் உயிரியல் தொழில் நுட்பப் பிரிவின் தலைவரான ஜென ரல் இகோர் கிரில்லோவ் வெளி யிட்டிருக்கிறார். பல ஆப்பிரிக்க நாடுகளில் உயிரியல் பரிசோதனைக்கூடங் களை அமெரிக்கா அமைத்திருக் கிறது. இவை அமெரிக்க ராணு வத்தால் நடத்தப்படுகிறது. பரிசோத னைக்கு உட்படுத்தப்படும் மருந்து கள் அமெரிக்கப் பெரு நிறு வனங்களால் உற்பத்தி செய்யப் படும். அந்த நிறுவனங்களுக்கு உத வவே அமெரிக்க ராணுவம் இந்த பரிசோதனை நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அமெரிக்காவின் பகாசுர மருந்து நிறுவனங்கள் ஜனநாயகக் கட்சிக்குப் பெரும் அளவில் நிதி வழங்குபவையாகும். தேர்தலுக்கு முன்பாக, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களில் பலருக்கும் அதிக நிதி அளிப்பது இந்த மருந்து நிறு வனங்களாகவே இருக்கின்றன. அவர்கள் வழங்கிய நிதிக்குப் பதி லாக வெளிநாடுகளில் பரிசோத னைக்கூடம் அமைத்து, ராணு வத்தின் உதவியோடு பரிசோதனை செய்து,
மருந்துகள் தயாரிப்புக்கு ஜனநாயகக் கட்சியின் ஆட்சி உதவி செய்து வருகிறது. உக்ரைன் மீதான நடவடிக்கை யில், ரஷ்யாவின் வசம் உள்ள பல்வேறு பகுதியில் உள்ள பரிசோத னைக்கூடங்களில் இருந்து ஆவ ணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டில் இருந்தே உக்ரைனில் மருத்துவமனைகளில் பயன்படுத்த வேண்டிய மருந்து களை பரிசோதனை செய்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. அந்த ஆவ ணங்களில் “அரசுப் பயன்பாட்டு க்கு மட்டும்” என்று எழுதப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. உலகம் முழுவதும் சோதனை இந்த ஆவணங்களை அமெரிக்க ராணுவ தொற்றுநோய்கள் ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் உரு வாக்கியுள்ளனர். நடமாடும் பரிசோத னைப் பிரிவுகளை உலகம் முழு வதும் உருவாக்குவது இவர்கள் திட்ட மாக இருந்திருக்கிறது. பரிசோத னைகளுக்கான ஏற்பாடுகள் அமெரிக்க ராணுவம் இருக்கக்கூடிய முகாம்களுக்கு அருகில் செய்யப்பட்டிருந்தன. ஒரு கட்டத்தில் வெளிநாடுகளில் உள்ள அனை த்து அமெரிக்க ராணுவ முகாம் களுக்கும் அருகில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று அந்த ஆவணங்களில் இருந்து தெரிய வந்திருக்கிறது. இந்த விபரங்களைத் தெரி வித்துள்ள கிரில்லோவ், “வேறு சில பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ள தாகக் காட்டிக் கொள்ளவும் செய்கிறார்கள். அதன் மூலம் தங்கள் பரிசோதனைகளுக்கு மனி தர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க முனைந்துள் ளனர். சில பன்னாட்டு நிறுவனங் களும் இந்தப் பரிசோதனைகளில் நேரடியாகப் பங்கேற்றுள்ளன” என்கிறார்.