வாசிங்டன்,ஜன.29- கருக்கலைப்பு தடைச் சட்டங்க ளால் அமெரிக்காவில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 64 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
கருக்கலைப்பு தடைச் சட்டங்க ளால் அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான பெண்கள் எவ்வாறு பாதிக்கின்றனர் என கண்டறிய கருக்கலைப்பு முற்றி லும் தடைசெய்யப்பட்ட அமெரிக்கா வின் மாநிலங்களில் ஆராய்ச்சி யாளர்கள் ஆய்வு ஒன்று மேற்கொண்ட னர்.
ஜமா இண்டர்னல் மெடிசன் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆராய்ச்சி முடிவுகள் அனை வரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளன.
2022 ஜூலை 1 முதல் 2024 ஜன. 1 வரையிலான காலகட்டத்தில், கருக்க லைப்பு தடைகளை அமல்படுத்திய அமெரிக்காவின் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை காரணமாக 64,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் கர்ப்பமடைந்து கருக் கலைப்பு செய்யமுடியாமல் கடுமை யான மன உளைச்சலையும் உடல் நல பிரச்சனைகளையும் வாழ்க்கைப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.