நாங்கள் ஒரு போதும் அமெரிக்காவின் இனப்படுகொலைக்கு நிகரான கொடிய தாக்குதலை மறக்க மாட்டோம்; எங்களுக்கு எதிரான பொருளாதார தடை உள்பட அனைத்து விதமான தடைகளையும் விதித்து எங்களைத் தனிமைப்படுத்துவது என்ற அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகள் எங்களது மக்களின் உயிரைக் குறி வைத்துள்ளன. கொரோனா பெருந்தொற்று உலகைத் தாக்கிய சமயத்தில், எல்லோரும் அந்த துயரத்தை எதிர்கொண்டிருந்த தருணத்தில் கியூப மக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கவிடாமல் செய்தது அமெரிக்கா. நாங்கள் எங்கிருந்தும் ஆக்சிஜனை பெற முடியாதவாறு தடுத்து நிறுத்தியது. ஆக்சிஜன் உற்பத்திக்காக நாங்கள் நடத்தி வந்த ஒரு ஆலையும் அந்த சமயத்தில் பழுதடைந்தது. அத்தகைய கடினமான தருணத்தை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டு எங்களது நாட்டின் உயிரைப் பறிக்க முனைந்தது. லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவும் மருத்துவ ஆக்சிஜன் கொடுப்பதற்கு முன் வந்த போதிலும் அந்த நிறுவனங்களை அமெரிக்க அரசாங்கம் தடுத்து நிறுத்தியது. அத்தகைய சூழலில் ரஷ்யாவே உதவிக்கரம் நீட்டியது. லத்தீன் அமெரிக்காவிலிருந்தும் கரீபியன் நாடுகளிலிருந்தும் அமெரிக்காவை மீறி ஆக்சிஜனை கொண்டுவர தனி விமானப் போக்குவரத்தை எங்களுக்கு ரஷ்யா ஏற்படுத்திக் கொடுத்தது.