world

img

பெரு ஆட்சிக் கவிழ்ப்பும் படிப்பினைகளும்

தென் அமெரிக்க நாடான பெருவில் 2021-ல் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி சிந்தனையாளரும், விவசாயிகளுடைய தலைவரும், ஆசிரியருமான பெட்ரோ காஸ்டிலோ(Pedro Castillo) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜூன் மாதம் பதவியேற்றுக்கொண்டார். 

தென் அமெரிக்க நாட்டில் இடதுசாரி மற்றும் முற்போக்காளர்களின் எழுச்சியின் தொடர்ச்சியாக பெருவிலும் இந்த மாற்றம் ஏற்பட்டது. மக்கள் தலைவராக, போராட்ட களத்திலிருந்து ஜனாதிபதியாக காஸ்டிலோ வெற்றி பெற்றார். ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை; எனினும் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட ஜனாதிபதி என்ற முறையில் அனைத்து முயற்சிகளையும் செய்தார். 

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பினை எதிர்கொண்டுதான் தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை செய்தார். அவரது முயற்சிகளுக்கு பெரும்பான்மை பலத்துடன் இருந்த வலதுசாரி நாடாளுமன்றம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருந்தது. 

காஸ்டிலோ எடுத்த முயற்சிகள்

 கல்வியறிவின்மையை போக்குவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% வரை கல்விக்கான முதலீட்டை அதிகப்படுத்தினார். இதற்கான சமூகத் திட்டங்களை அமல்படுத்தினார். n  2.2 மில்லியன் சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். n  விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிக்கான திட்ட ங்களை உருவாக்கி அமல்படுத்தினார். n 300க்கும் மேற்பட்ட விவசாய கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி கிராமப்புற கூட்டுறவு சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார். n பெரும் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 350 இடங்களில் 13  மில்லியன் மக்கள் பயனடையும் முறையில் 84 கோடி டாலர் ஒதுக்கி நிதி உதவி செய்தார்.  சமையல் எரிவாயு விலையை  2.8 டாலராக குறைத்து வழங்கினார். n அரசியல் அமைப்பை திருத்தி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.ஜனாதி பதியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான அடிப்படை விதியாக அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த “தார்மீக இயலாமை” என்ற வார்த்தையை நீக்குதல்,மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியை வலதுசாரிகள் பெருபான்மை என்ற பெயரால் பதவி நீக்கம் செய்யும் முறையை மாற்றிட திருத்தங்களை கொண்டுவந்தார். இவற்றையெல்லாம் சொத்துடைமை வர்க்கத்தால் சகித்துக் கொள்ள முடியுமா?

தார்மீகமற்ற தாக்குதல்   

காஸ்டிலோவிற்கு பெரும்பான்மை இல்லாத சூழலைப் பயன்படுத்தி அடிக்கடி கவிழ்க்க முயன்றனர். அமெரிக்கா தலைமையிலான சுரங்க முதலாளிகளும், ஆலை முதலாளி களும், ராணுவமும், ஆயுதப்படைகளும், கத்தோலிக்க தேவா லயங்களும், இடதுசாரி ஜனாதிபதி காஸ்டிலோவை நீக்குவதற் கான இம்பீச்மென்ட் அதாவது “தார்மீக இயலாமை”யைக் கண் டிக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தனர். பல நேரங்களில் இந்த பெரும்பான்மையை எதிர்கொள் வதற்காக தனது அமைச்சர்களை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக நிரந்தர  

தார்மீக இயலாமை என்ற தீர்மானத்தை கொண்டு வந்து தோற்கடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.  அதிகார துஷ்பிரயோகம் செய்வது, சட்டம் இயற்றுபவர் களை பதவி நீக்கம் செய்வது, அரசியல் சட்டத்திற்கு விரோத மாக நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டது, ஊழல், கருத்து திருட்டு, கிளர்ச்சியை தூண்டி விட்டது போன்ற குற்றச் சாட்டுகளை திட்டமிட்டு சுமத்தி கைது (7.12.22) செய்து சிறை யில் அடைத்துள்ளனர். காஸ்டிலோவை ஆதரித்த முன்னாள் பிரதமர் அணிபால் டோரஸ் (Anibal Torres) இந்த குற்றச்சாட்டுக் காகவே இவரை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம் என்று அவர்களின் சட்டம் கூறுகிறது.  “நிரந்தர தார்மீக இயலாமை” என ஜனாதிபதிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரலாம் என்பது 180 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நாட்டின் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஒரு விதி.  இந்த விதிக்கு புறநிலை வரையறை எதுவும் இல்லை என்று நிபு ணர்கள் கூறுகின்றார்கள். 19-ஆம் நூற்றாண்டில் இதை பைத்தியக்காரத்தனம் என்று கருதினார்கள். இப்போது இடது சாரி ஜனாதிபதி இதை நீக்குவதற்கு எடுத்த முயற்சிகளை தடுத்து ஊழல் குற்றச்சாட்டை இதன் மூலம் சுமத்தி ஏகாதிபத்திய முதலாளிகள் ஆட்சியைக் கவிழ்த்து இருக்கிறார்கள். 

18 மாத கால சதித்திட்டம் 

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் 18 மாத காலம் போட்ட சதித் திட்டத்தை இப்பொழுது நிறைவேற்றி இருக்கிறார்கள். கார்டிலோ ஓ.ஏ.எஸ் (OAS-ORGANISATION OF AMERICAN STATES) என்ற அமைப்பிலும் முறையிட்டார். பயனில்லை.  வாஷிங்டனுக்கு ஒரு நிலையற்ற உலகம் இருந்தால் தான்  தனது மேலாதிக்கத்தை செலுத்த முடியும். பெரு நாட்டில் 2016 ஆம் ஆண்டுகளிலிருந்து அடுத்தடுத்து 5 ஜனாதிபதி கள் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தநிலை அமெரிக்கா விற்கு சாதகமாக இருந்தது. காஸ்டிலோ பதவிக்கு வந்த பிறகு எங்கே ஒரு நிலைத்தன்மை உருவாகி விடுமோ என்ற அச்சத் தில், மீண்டும் நிலையற்ற தன்மைக்கு பெருவை கொண்டுவர வேண்டும் என்ற சுயநலத்தால் அமெரிக்க தூதரகம் அனைத்து உதவிகளும் செய்து ஆட்சியை கவிழ்த்தது.துணை ஜனாதிபதி யாக இருந்த  டினா போலுவார்டெயை (Dina Boluarte) உடனடியாக ஜனாதிபதியாக பதவி ஏற்க சொல்லி அவரை அங்கீகரித்து, காஸ்டிலோவின் பதவி நீக்கத்தை ஆதரித்தது.  டினா போலுவார்டெயின் நியமனத்தை பெரு அரசாங்கம் கொண்டாடுகிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். ஜனநாயக ஸ்திரத் தன்மை யை உறுதி செய்ததாக பெரு நாட்டின் சிவில் நிறுவனங்களை யும், அதிகாரிகளையும், வெள்ளை மாளிகை பாராட்டியது என்றால் அவர்களை தவிர இந்த ஆட்சி  கவிழ்ப்புக்கு வேறு யார் அடித்தளமாக இருந்திருக்க முடியும்.? 

இடதுசாரித் தலைவர்கள் கடும் கண்டனம் 

உலகம் எதுவும் சொல்லாது; அனைவரும் அமைதியாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். இது அமெரிக்காவால் தூண்டப்பட்ட மற்றொரு சதி. இந்த ஆட்சிக்  கவிழ்ப்பு லத்தீன் அமெரிக்காவின், இடதுசக்திகளின் முன்னேற்றத்திற்கு எதிராக நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ தாக்குதல். இந்த தாக்கு தல், தந்திரங்கள், பொய்கள் நிறைந்த ஒரு குரூர யுத்தத்தின் துவக்கமாகும் என்று வெனிசுலாவின் தேசிய அரசியல் அமைப்பு சபையின் தலைவர் டியோஸ்டாடா கப்பல்லோ கூறுகிறார்.  மெக்சிக்கோ  ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் ஓப்ராடோர், பொருளாதார மற்றும் அரசியல் உயர் அடுக்கு பிரி வினர் திட்டமிட்டு காஸ்டிலோவை   கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியதோடு, காஸ்டி லோவுக்கு மெக்சிகோ அரசியல் புகலிடம் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.  பொலிவியா  ஜனாதிபதி லூயிஸ் ஆர்சின், காஸ்டி லோவின் பதவி நீக்கத்தை ஏற்கவில்லை என்றும், இது போன்று பொலிவியாவில் இரண்டு முறை முயற்சித்ததையும் ஓ. ஏ.எஸ் அமைப்பு மீண்டும் தவறான மதிப்பீடு செய்து, பெரு நாட்டின் ஆட்சிக்  கவிழ்ப்புக்கு துணை போயிருக்கிறது என்று கண்டித்தார்.  பெருவின் தலைநகரில் மிகப்பெரும் போராட்டங்கள் காஸ்டிலோவிற்கு ஆதரவாக நடைபெற்று வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகளும், முற்போக் காளர்களும் அதிகாரத்திற்கு வருவதும், அவற்றை அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைமையிலான பெரும் முதலாளிகள்  கவி ழ்ப்பதும் 1971-ஆம் ஆண்டு சிலி நாட்டில் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஏகாதிபத்திய முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராக மீண்டும் மீண்டும் மக்கள் எழுச்சி ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது.

அரசை மாற்றினால் போதாது;  அடிப்படையை மாற்ற வேண்டும்

ண்டிய தேவை ஏற்பட்டது. அவர் சார்ந்திருந்த கட்சி பெரு லிப்ரே (Free Peru)  பல நேரங்களில் அவருடன் இணைந்து இருக்கவில்லை. 130 நாடாளுமன்ற பிரதிநிதிகளில் 101 பேர்  காஸ்டிலோவுக்கு எதிராக வாக்களித்தனர். பெரு லிப்ரே கட்சியின் உறுப்பினர்கள் 37 பேர்களும், ராஜினாமா செய்த அமைச்சர்களும் இவருக்கு எதிராக வாக்களித்து உள்ளனர்.  இவற்றை காஸ்டிலோ அறிந்த போதிலும் வலதுசாரி களின் கையில் அகப்பட்டு இருக்கக்கூடிய நாடாளுமன்றத்தை கலைத்தால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை யில் முன் முயற்சி எடுத்தார்.

 தொழிலாளர்களும் விவசாயிகளும் ஜனாதிபதியை தேர்ந் தெடுக்கலாம்; ஆனால் நாட்டை ஆள்பவர்கள் பொருளாதார பலம் கொண்டவர்கள், ஊடகங்கள் மற்றும் அரசு எந்திரத்தை கட்டுப்படுத்துபவர்கள்.  அரசாங்கத்தை மாற்றினால் மட்டும் போதாது, அமைப்பின் அடிப்படை மாற்றத்திற்காக நாம்  போராட வேண்டும். ஆனால் அங்கு செல்வதற்கு ஒடுக்கப்பட்ட  மக்களின் அமைப்பும், அணி திரட்டலும், நாம் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு புரட்சிகரத் தலைமையும் தேவை என்பதை இன்றைய சூழல் உணர்த்துகிறது.  பெரும்பான்மை ஆதரவு இல்லை என்று தெரிந்தும் காஸ்டிலோ மக்களை தெருக்களில் இறக்குவதற்கான முயற்சி களை ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து எடுத்திருக்க வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்படுவதில் நியாயம் இருக்கிறது. பல நேரங்களில் பெரும்பான்மை இல்லை என்ற நிலைமையில் சமரசப் போக்கில்  நடத்துவதற்கு முயற்சி செய்தாலும், முதலாளித்துவ  வர்க்கம், தங்கள் வர்க்கத்தைச் சேராத ஒரு வரை, சாதாரண  மக்களிடமிருந்து வந்த ஒருவரை, தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கு அனுமதிக்காது என்ற வரலாற்று அனுபவம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.  பெருவின் அரசியல் நிலை நெருக்கடியாக உள்ளது.  லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் உள்ள இடதுசாரி களை முற்போக்காளர்களை ஒழித்துக் கட்டுவதற்கான திட்டத் தோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் அடுத்தடுத்த முயற்சிகளை செய்து கொண்டே இருக்கிறது. அர்ஜெண்டினா, பொலிவியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் அனுபவம், காலம் மாறிவருவதைக் காட்டுகிறது. 

அமெரிக்க சதியால் கவிழ்க்கப்பட்ட பிரபலமான அரசியல் வாதிகளை மீண்டும் ஆட்சிக்கு திருப்பி அனுப்புகிறார்கள்.  புதிய தாராளமயப் பொருளாதாரத்தில் ஏமாற்றம் அதிகரித்து வருகிறது, அமெரிக்காவால் இதில் எதுவும் செய்ய முடியாது.  இப்பிராந்தியத்தின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா, தனது கைப்பாவை தலைவர்களை கொண்டு எடுபிடி அரசை நிறுவும் வாய்ப்பை கூடிய விரைவில்  இழக்கும். அரசியல் போராட்டத்தின் அடுத்த கட்டமாக தொழிலாளர் களும் விவசாயிகளும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராடுவது மட்டுமல்ல, உண்மையான சக்தி தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஒழுங்க மைக்கப்பட்ட, புரட்சிகர ஏழை விவசாயிகளின்  அணி திரட்டலை   நிரூபிக்கும் வகையில் அடித்தளத்தை அமைக்க வேண்டும். தென் அமெரிக்காவில் உள்ள இடதுசாரி தலைவர்கள் மக்கள் போராட்டத் தலைவர்களாக இருக்கிறார்கள். மக்களிட மிருந்து அந்நியப்பட்டவர்களாக இல்லை. களப்போராட்டத் திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் போராட்டம் நிச்சயம் வெல்லும். 

- அ.பாக்கியம்