ஈக்வடார் நாடாளுமன்றத்தின் முன் னாள் உறுப்பினரும் ஈக்வடார் ஜனாதிபதி வேட்பாளருமான பெர்னாண்டோ விலாவிசென்சியோ,ஆகஸ்ட் 9 அன்று மாலையில் நாட்டின் தலைநகரான குய்டோ வில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு திரும்பும் வேளையில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். ஆகஸ்ட் 20 அன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கொலை ஈக்வடாரில் தேசிய அவசர நிலையாக மாறியுள்ளது.தேர்தலையொட்டி நடைபெற்ற அனைத்து கருத்து கணிப்புகளிலும் முதல் 4 அல்லது 5 ஆவது இடத்தை பிடித்து வந்த பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தணிக்கை ஆணையத்தை வழிநடத்துபவராக இருந்துள் ளார்.
மேலும் ஆணையத்தின் தணிக்கை முன்னாள் ஜனாதிபதி கில்லர்மோ லாசோவுக்கு எதிரான குற்றச்சாட்டு விசாரணையை விரைவு படுத்துவதற்கு சாதகமான அறிக்கையை வழங்கியுள்ளது . ஈக்வடாரை சுரண்டும் எண்ணெய் சுரங்க நிறுவனங்களின் ஒப்பந்தங்களை மறுபரி சீலனை செய்ய வேண்டும் எனவும் போதைப் பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதிரடியாக குரல் எழுப்பி வந்தார். இதனால் ஜனாதிபதி தேர்தலில் அதிகம் பேசப்பட்ட நபராக வலம் வந்தார் பெர்னா ண்டோ.தேசிய மற்றும் சர்வதேச போதை பொருள் கடத்துபவர்களிடம் இருந்தும் கொலை மிரட்டல்களை எதிர் கொண்ட அவர் கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி தனக்கு கொலை மிரட்டல் வந்தது என அட்டர்னி ஜெனரல் அலு வலகத்திலும் தெரிவித்துள்ளார். போதை பொருள் கடத்தல் கும்பல்களால் ஈகுவடாரில் பல நகரங்களில் அரசியல் பொரு ளாதார சமூக மற்றும் மக்களின் பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக அவர்கள் குழந்தைகளை வேலை க்கு பணியமர்த்தி கொடுமை செய்யும் அள விற்கு அவர்களின் அட்டூழியம் அதிகரித்துள் ளது.பல்வேறு போட்டி கும்பல்களும் இதில் இருப்பதால் பல இடங்களில் துப்பாக்கி சண்டை கள் நடைபெறுகின்றன. இதனால் நாட்டில் வன் முறைகள் மிக தீவிரமாக அதிகரித்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பாக நாட்டின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான மாண்டா நகரின் 38 வயதான மேயர் அகஸ்டின் இட்ரியாகோ படுகொலை செய்யப்பட்டார்.ஜூலை 17 அன்று நாடாளுமன்ற வேட்பாளரான ரைடர் சான்செஸ், எஸ்மரால்டாஸின் குயின்டேவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.