போர்கள் இல்லாத ஆப்பிரிக்கா : தென்னாப்பிரிக்கா அழைப்பு
போர்கள் இல்லாத கண்டமாக ஆப்பிரிக்கா இருக்க வேண்டும் என ஆப்பிரிக்க தினத்தன்று தென்னாப்பிரிக்கா அழைப்பு விடுத்துள் ளது. மேலும் ஆப்பிரிக்கக் குழந்தைக ளுக்கு உலகளாவிய கல்வியை உறு திப்படுத்த வேண்டும் எனவும் அது வலி யுறுத்தியுள்ளது. ஆப்பிரிக்க ஒன்றி யத்தின் முந்தைய அமைப்பான ஆப்பி ரிக்க ஒற்றுமை அமைப்பின் சாதனைக ளைக் கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் மே 25 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஆப்பிரிக்கா தினத்தில் 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவகையில் ஆப்பிரிக்கக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மாணவர்களின் தகவல்களை கேட்கும் டிரம்ப்
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளி நாட்டு மாணவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது நாடுகளின் விவரங்களை வெளியிட வேண்டும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என டிரம்ப் உத்தரவிட்ட நிலையில் அதற்கு நீதி மன்றம் தடை விதித்தது. அதன் பிறகு சில நாட்களிலேயே பல்கலைக் கழகத்தில் உள்ள வெளிநாட்டு மாண வர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். பல்கலைக் கழகத்திற்கு நாங்கள் பில்லியன்கணக்கான டாலர்கள் கொடுக்கிறோம், ஆனால் பல்கலைக்கழகம் எங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக இல்லை” என்று டிரம்ப் கூறியுள்ளார்.
காசாவின் 75 சதவீத நிலத்தை ஆக்கிரமிக்க இஸ்ரேல் தீவிரம் காட்டுகிறது
காசா, மே 26- இஸ்ரேல் ராணுவம் காசாவின் 75 சதவீத பகுதியை ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்க ளாகவே காசாவில் ராணுவத் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 75 சதவீத காசா நிலத்தை ஆக்கிரமித்து விட்டு ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்ட சுமார் 20 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு மீதமுள்ள வெறும் 25 சதவீத நிலப்பரப்பை மட்டுமே இஸ்ரேல் கொடுக்கும் என கூறப்படுகின்றது. வடக்கு காசா பகுதியிலிருந்து அனைத்து பாலஸ்தீனர்களையும் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் 2025 மே 22 முதல் தொடர்ந்து துரத்தி வருகின்றது. ஹமாஸை வீழ்த்தி பணயக் கைதிகளை மீட்கும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறுகிறார். ஆனால் ஒவ்வொரு நாளும் 50 முதல் 100 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை செய்து வருகின்றது. இந்த தாக்குதலின் இறுதியில் இஸ்ரேல் ராணுவம் முழு காசாவையும் ஆக்கிரமிக்கும் என நேதன்யாகு ஏற்கனவே தெரிவித்துள் ளார். இந்நிலையில் தான் காசாவின் மொத்த பரப்பளவான 41 கிலோமீட்டரில் சுமார் 30.75 கி.மீ (75 சதவீத) பகுதியை இஸ்ரேல் ஆக்கிர மிக்க உள்ளது. மீதமுள்ள 25 சதவீத நிலப் பரப்பான 10.25 கி.மீ பகுதியை மூன்று மண்ட லங்களாக பிரித்து அதில் பாலஸ்தீனர்களை திறந்தவெளி சிறையில் இருப்பதை போல இஸ்ரேல் அடைத்து வைக்கும் என கூறப் படுகிறது. தற்போது வரை இஸ்ரேல் ராணுவம், காசாவின் சுமார் 40 சதவீத நிலத்தை ஆக்கிர மித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதுவரை இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலில் 53,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தை யூனுஸ் அமெரிக்காவிடம் அடகு வைத்து விட்டார்: ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
புதுதில்லி/டாக்கா,மே26- வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ள முகமது யூனுஸ் அமெரிக்காவுக்கு வங்கதேசத்தை தாரை வார்த்துவிட்டார் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டி உள்ளார். அவாமி லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ முக நூல் பக்கத்தில் இந்தியாவில் தஞ்சமடைந் துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வெளியிட்டுள்ள அறிக்கையில் முகமது யூனுஸ், பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் ஆதரவுடன் எனது தலைமை யிலான ஆட்சியைக் கைப்பற்றினார். அவரது இடைக்கால ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் இருக்கும் சிறைகளில் இருந்த கைதி கள் விடுதலை செய்யப்பட்டு சிறைகள் காலி யாக்கப்பட்டன. எங்களது அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. இது வங்கதேச அரசியல மைப்பிற்கு விரோதமான செயல். வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசக ராக இருக்கும் யூனுஸ் மக்களின் தீர்ப்பின் மீதோ, அரசியலமைப்பின் மீதோ நம்பிக்கை வைக்கவில்லை. அவர் வங்கதேசத்தை அமெ ரிக்காவிற்கு விற்றுவிட்டார். செயின்ட் மார்ட்டின் தீவை கொடுக்க வேண்டும் என கூறிய போது எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் அதனை மறுத்த தால் கொல்லப்பட்டார். ஆனால் முகமது யூனுஸ் நாட்டின் இறையாண்மையை அமெரிக்காவிற்கு தாரை வார்த்துவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார். முகமது யூனுஸ் மற்றும் வங்கதேச ராணு வத் தளபதி வாக்கர்-உஸ்-ஜமான் இடையே சமீபத்தில் மோதல் போக்கு வெடித்தது. மேலும் கடந்த சில மாதங்களாகவே வங்க தேசத்தில் அரசியல் பதற்றம் நிலவி வருகிற நிலையில் ஷேக் ஹசீனா இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.