world

img

தகுதியற்ற ரயில் நிறுவனம் நாட்டுடமை பிரிட்டனில் தனியாரைப் பாதுகாக்க நடவடிக்கை

லண்டன், மே 14- எந்தவித முன்னனுபவம் மற்றும் பிற தகுதிகள் இல்லாமல் பிரிட்டனில் ரயில் போக்கு வரத்தை நடத்திக் கொண்டிருந்த நிறுவனத்தை நாட்டுடமை ஆக்கியிருக்கிறார்கள்.  பிரிட்டனில் நல்ல லாபத்துடனும், தரமான போக்குவரத்து சேவைகளுடனும் ரயில் போக்குவரத்து இயங்கிக் கொண்டிருந்தது. அப்பாதைகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை ஆளும் வலதுசாரிகள் எடுத்தனர். இந்தப் போக்குவரத்து சேவைகளை பல தனியார் நிறுவனங்கள் எடுத்து இயக்கிக் கொண்டிருந்தன. பெரும்பாலான பகுதிகளில் தரமற்ற சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. தொழிற்சங்கங்களும், பயணிகளும் ஒட்டு மொத்த ரயில் சேவையை மீண்டும் நாட்டுடமை யாக்க வேண்டும் என்று கோரி வந்தனர். டிரான்ஸ்பென்னின் என்ற நிறுவனம் இங்கிலாந்தின் வடக்கில் உள்ள கடற்கரைப்பகுதியில் ரயில்களை இயக்கி வந்தது. ஃபர்ஸ்ட் குரூப் என்ற நிறுவனத்தின் கீழ்  டிரான்ஸ்பென்னின் இயங்கி வந்தது. இந்தப் பகுதிகளில் ரயில் சேவையைத் தரத் தொடங்கும் முன்பாக, டிரான்ஸ்பென்னின் நிறுவனத்திற்கு எந்தவித முன்னனுபவமும் இல்லை.

பல நாட்கள்  ரயில்கள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டன. ஆனால் மக்கள் பணத்தை மானியங்கள் என்ற  பெயரில் இந்த நிறுவனம் வாங்கிக் கொண்டது.  ஆறில் ஒரு பங்கு சேவையை கிட்டத்தட்ட நிறுத்தியே விட்டார்கள். ஆயிரக்கணக்கான பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார் கள். திறமையற்ற வகையில் நிறுவனம் இயக்கப்பட்டது. சேவை முழுமையாக நிறுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அந்த நிறுவனம் இயக்கி வந்த ரயில் பாதைகளை நாட்டுடமையாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதேவேளையில், எப்போது இந்த ரயில் சேவைகள் திறமையுடனும், லாபத்துட னும் இயங்கத் தொடங்குகிறதோ, அப்போது  மீண்டும் டிரான்ஸ்பென்னின் கைவசமே வடக்கு இங்கிலாந்தின் ரயில் போக்குவரத்து சேவை ஒப்படைக்கப்படும் என்று போக்கு வரத்துத் துறை அமைச்சர் மார்க் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார். திறமையற்ற தனியார் நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு ஆதரவாகவும் அவர் பேசி யிருக்கிறார். தொழிற்சங்க நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்ற அவரின் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. நாட்டின் பல பகுதிகளிலும் திறமையற்ற நிர்வாகங் களால் ஏற்கனவே சில பகுதிகளில் ரயில் போக்கு வரத்து சேவைகள் மீண்டும் நாட்டுடமை யாக்கப்பட்டு விட்டன. லண்டனின் வட கிழக்கு ரயில்வே, வடக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதி களில் உள்ள ரயில் போக்குவரத்து சேவைகள் மீண்டும் அரசின் வசம் வந்துள்ளன.

சேவையில் மோசடி

தனியார் மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளில் சேவை செய்து வந்த தனியார் நிறுவனங்கள் மோசடி வேலைகளில் ஈடுபட்டன. போதிய ரயில் ஓட்டுநர்களை நியமிக்காமலும், இருக்கும் ஊழியர்களைத் தவறாகப் பயன்படுத்தியும், எப்போதுமே ஊழியர்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தும் வந்தன. அரசின்  மானியத்தைப் பெற தவறான புள்ளிவிபரங் களை அள்ளித் தெளித்தன.  ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவற்றில் நடக்கும் ரயில் போக்குவரத்து சேவைகள் இன்றும் அரசின் வசமே இருப்பதால் சேவைகள் மக்களுக்கு நல்ல வகையில் கிடைத்து வருகின்றன. “இந்த அரசாங்கம் உண்மையிலேயே பிரிட்டன் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க விரும்பினால் பயணிகள், வணிகத்துறையினர் மற்றும் தொழிற்சங்கங்களின் குரல்களைக் கேட்க வேண்டும்.  இவர்கள் அனைவருமே பாது காப்பான ரயில் போக்குவரத்தை விரும்பு கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொரு  பகுதியாக நாட்டுடமையாகி வருவதால், இனி மேல் ஒருபோதும் தனியார் மயம் என்பதே இருக்கக்கூடாது. அது பயணிகளுக்கு நெருக்கடிகளைத்தான் கொண்டு வந்தது” என்று டிரான்ஸ்பென்னின் நிறுவன ரயில் போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஆலன் வாலண்டைன் தெரி வித்துள்ளார்.