world

img

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 15 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, தொடர் கனமழை காரணமாக சுமத்ரா தீவின் சோலோக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி கொண்டிருந்த தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் 15 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 3 பேர் உயிருடன் மீடகப்பட்டனர். இன்னும் 25 பேர் புதைந்துள்ளனர்.அவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

இது தவிர, கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை கிராமமான சுங்காய் அபுவிலும் மண்ணில் புதையுண்டிருக்கக் கூடியவர்களைத் தேடும் பணிகளை தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் கூறினர்.