உலகம் முழுவதும் இன்று பத்திரிகை சுதந்திர தினம் முன்னெடுக்கப்படுகிறது.
கடந்த 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் கொலம்பியப் பத்திரிகையாளரான கிலெர்மோ கானோ இசாசா அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலை பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு உலகம் முழுவதும் வலுப்பெற்றது. இதைத்தொடர்ந்து உலக பத்திரிகையாளர்களின் தொடர் முன்னெடுப்புகள் காரணமாக 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்று கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் மே 3-ஆம் தேதி பத்திரிகை சுதந்திர நாள் முன்னெடுக்கப்படுகிறது. ஊடக சுதந்திரம், பத்திரிகையாளர் பாதுகாப்பு, நம்பகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு நலன்களை வலியுறுத்தும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்தாண்டின் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு அட்டவணையில் இந்தியா 161வது இடத்தில் இருக்கிறது. தாலிபான் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானை (152வது இடம்) விட பின்தங்கி உள்ளது. இதன் மூலம் ஊடக சுதந்திரத்தை நசுக்கும் நாடாக இந்தியா மாறி வருகிறது என்பது நன்றாக தெரிகிறது.
கடந்த 2016 முதல் 2021 வரை 455 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2022ல் மட்டும் 86 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 22 பேர் இந்தியர்கள். உலகளவில் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் வரையில் 363 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 7 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.