world

img

ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்

ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்

தலையிடுமாறு சீனாவிடம் கெஞ்சுகிறது அமெரிக்கா

ஹோர்முஸ்,ஜூன் 23-  ஹோர்முஸ் நீரிணையை மூட வேண்டாம் என ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சீனாவிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.  ஐ.நா சாசன விதிமுறைகளை மீறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொ டர்ந்து உலகின் மிக முக்கிய நீர் வழித்தட மான ஹோர்முஸ் நீரிணையை அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் மூடி யுள்ளது ஈரான் அரசு.  இந்த வழியாகச் செல்லும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களை தாக்குவோம் எனவும் எச்சரித்துள்ளது. மேலும் ஈரானின் ஒப்புதல் இல்லாமல் எந்த கப்பலும் இந்த நீரிணையை கடக்க முடியாது எனவும் அறிவித்துள்ளது.  சீனாவிடம் கெஞ்சும் அமெரிக்கா  ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, இந்த அறிவிப்பை கண்டு அதிர்ச்சி அடைந் தது. அமெரிக்காவின் மிக நெருங்கிய ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கு இப்பாதை வழியா கவே அதிகளவிலான கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படு கின்றன. இந்நிலையில் இது உலகளவில் பொருளாதாரப் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் சீனாவுடனான தொலை பேசி உரையாடலில் இந்த நீரிணையை மூட வேண்டாம் என ஈரானுக்கு அழுத்தம் கொடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளது அமெரிக்கா. சீனாவிடம் கோரிக்கை வைத்ததை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். மேலும் அந்த முடிவு தற்கொலைக்கு சமம் எனவும் அவர் கூறியுள்ளார்.   ஹோர்முஸ் நீரிணை  ஹோர்முஸ் நீரிணை என்பது ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே அமைந் துள்ள ஒரு முக்கியமான கடல் பாதையாகும். இது பாரசீக வளைகுடாவையும்  ஓமன் வளை குடாவையும் அரபிக் கடலுடன் இணைக்கிறது. உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் பரிமாற்றம் நடக்கும் சரக்குப் பாதையாக இது உள்ளது. உலகின் அன்றாட எண்ணெய் விநி யோகத்தில் சுமார் 20-30 சதவீதம் இந்த நீரிணை வழியாகத் தான் கொண்டு செல்லப் படுகிறது.   சவூதி அரேபியா, இராக், ஐக்கிய அரபு அமீ ரகம், குவைத் போன்ற நாடுகள் இந்த நீரிணை வழியாகவே தங்கள் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்கின்றன. அதாவது நாளொன்று க்கு சுமார் 18-21 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இந்த நீரிணையை கடந்து செல்கின்றன. உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளரான கத்தார் தனது பெரும்பா லான சரக்குகளை இந்த நீரிணை வழியா கவே அனுப்புகிறது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயு மட்டுமின்றி பிற வகையான வேதிப்பொ ருட்கள், உரங்கள், பிற பெட்ரோலியப் பொருட்களும் இந்தப் பாதையில் தான் உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.  பொருளாதாரப் பாதிப்புகள்  தற்போது இந்த நீரிணை மூடப்பட்ட நிலை யில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் இதர ஐரோப்பிய நாடுகளும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சந்திக்கும். விலை உயர்வை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.    இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யில் சுமார் 40 சதவீதத்தை இந்த நீரிணை வழியாகவே கொண்டு வருகிறது. மேலும் சூயஸ் கால்வாய் உள்ளிட்ட மற்ற சில  கடல் பாதை வழியாக ரஷ்யா உள்ளிட்ட நாடு களிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை யில் தற்போதைக்கு இந்தியாவால் சமாளிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.   ஹோர்முஸ் நீரிணையை மூடுவது ஈரானின் சொந்த எண்ணெய் ஏற்றுமதியையும் பாதிக் கும். இது அவர்களின் பொருளாதாரத்தை தற்கொலைக்கு தள்ளுவது போன்றதுதான். எனினும் அமெரிக்காவின் போர்க் குற்றங்க ளுக்கு பதிலடி கொடுப்பதற்காக ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது.  செங்கடலிலும் தாக்குதல்  ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி ராணுவக்குழு அதிகாரப் பூர்வமாக போரில் இறங்குவதாக அறிவித்துள் ளது. காசா மீது இஸ்ரேல் இனப்படுகொலை தாக்குதலை தீவிரப்படுத்தியதில் இருந்தே ஹவுதிக்குழு இனப்படுகொலைக்கு ஆதர வாக உள்ள நாடுகளின் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக போரில் இறங்கியுள்ள இந்த ராணுவக்குழு சூயஸ் கால்வாய், செங்கடல் பாதை வழியாகச் செல்லும் கப்பல்களின் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த துவங்கியுள்ளது. இந்த இரு நடவடிக்கைகளும் வரும் நாட்களில் கடல் வணிகத்தை கடுமையாகப் பாதிக்கும்.