மோடிக்கு அழைப்பு: கனடாவில் பாதுகாப்பு அதிகரிப்பு
கனடாவில் நடைபெற உள்ள ஜி-7 மாநாட்டுக்கு பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அமைப்பின் தலைவர் படுகொலையில் இந்தியாவிற்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில் கனடா பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
ஈரானை இஸ்ரேல் தாக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானை இஸ்ரேல் தாக்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கையுடன் உள்ளதாக வும் இதனால் தான் ஈரானில் உள்ள அமெரிக்க அதிகாரிகளை வெளியேற கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் இத்தாக்குதல் நடக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே இஸ்ரேல் ஈரா னை தாக்கும் என எச்சரிக்கப்பட்டது. இந்நி லையில் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயா ராக இருப்பதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
சீன தொழில் நுட்பத்தால் வேகமெடுக்கும் ஆயுத உற்பத்தி
சீன தொழில்நுட்பத்தின் மூலமாக ரஷ்யா வேகமாக அதிக ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது என நேட்டோ செயலாளர் ரூட்டே தெரிவித்துள்ளார். மேலும் நேட்டோ நாடுகள் ஒரு ஆண்டாக உற்பத்தி செய்த ஆயுதங்களை ரஷ்யா 3 மாதத்தில் செய்துள்ளது. இந்தாண்டு 1,500 பீரங்கிகள், 3,000 கவச வாகனங்கள் மற்றும் 200 இஸ்கேண்டர் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஐரோப்பிய நாடுகளும் ராணுவத்திற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஹசீனா மீதான கோபம் இந்தியா மீது மாறியுள்ளது : யூனுஸ்
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான கோபம் இந்தியாவுக்கு எதிரானதாக மாற்றப் பட்டுள்ளது என வங்கதேச தலைமை ஆலோ சகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். இந்தியா வில் இருந்து ஹசீனா வங்கதேச மக்களுக்கு வெளியிடும் செய்தி அம்மக்களை கோபம் அடையச்செய்கிறது. பிரதமர் மோடியுடன் பேசிய போது ஹசீனா வங்கதேச மக்களிடம் ஆன்லை னில் பேசாமல் இருப்பதை உறுதிசெய்ய உத வுங்கள் என கோரிக்கை விடுத்தேன். ஆனால் ஹசீனா பேசும் தேதி நேரம் உட்பட அறிவிக்கப்படு கிறது என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்தது நல்லது : டிரம்ப்
டிரம்ப் மீதான விமர்சனத்துக்கு எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்திருப்பது நல்லது என டிரம்ப் கூறியுள்ளார். மேலும் மஸ்க் மீது நான் எந்தக் குறையும் சொல்லப்போவதில்லை. ஆனால் நான் சற்று ஏமாற்றமடைந்தேன் என தெரிவித்துள்ளார். குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட எப்ஸ்டின் வழக்கில் டிரம்ப் பெயர் இருப்பதாக கூறி எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் டிரம்பை அதிகம் விமர்சித்து விட்டேன் என வருத்தம் தெரிவித்திருந்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நிறைவேறா குழந்தை ஆசை : ஐநா அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
நியூயார்க்,ஜூன் 12- உலக மக்கள் தொகை குறித்த ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கையின்படி, பொருளாதார நெருக்கடிகள் இந்திய இளைஞர்களின் குழந்தை பெறும் ஆசையை நிறைவேற விடாமல் தடுப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா. மக்கள் தொகை நிதியம் (UNFPA) “உண் மையான கருவுறுதல் நெருக்கடி: மாறிவரும் உலகில் இனப்பெருக்க சுதந்திரத்தை அடையும் முயற்சி” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, இந்தியா உட்பட 14 நாடுகளில் 14,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆன்லைன் ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதில் 1,048 இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆய்வு, இந்திய மக்கள் தொகை இந்த ஆண்டு 146.39 கோடியை எட்டும் என மதிப்பிட்டுள் ளது. மேலும், தமிழ்நாடு, கேரளா, தில்லி போன்ற மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி யுள்ள நிலையில், மகாராஷ்டிரா, பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. குழந்தைகளின் எண்ணிக்கையில் பொருளாதாரத் தாக்கம் உலகளவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்க ளில் 50 சதவீதமானவர்கள், மோசமான பொருளா தாரச் சூழல் தாங்கள் விரும்பிய எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்குவதாகக் கூறியுள்ளனர். மேலும், ஐந்தில் ஒருவர் தாங்கள் விரும்பாத போதும் குழந்தை பெற்றுக்கொள்ள நிர்பந்திக் கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில், 38 சதவீதமானவர்கள் பொரு ளாதார நெருக்கடிகள் தாங்கள் விரும்பும் குடும்ப அமைப்பை உருவாக்குவதைத் தடுப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். வேலையின்மை, வீடு இல்லாத நிலை, நிரந்தரமற்ற வேலை, வீடு வாங்குவதில் உள்ள சிரமம், நம்பகமான மற்றும் ஆரோக்கியமான குழந்தை பராமரிப்பு வசதிகள் இல்லாத சூழல் போன்ற பிரச்சனைகள் குழந்தை பெறும் ஆசையைத் தடுப்பதாகவும் மக்கள் கூறியுள்ளனர். இதேபோல், மோசமான சுகாதாரச் சூழல், மோசமடைந்து வரும் பொது ஆரோக்கியம், மலட்டுத்தன்மை மற்றும் கர்ப்பம் தொடர்பான பரா மரிப்பு சுகாதார வசதிகள் குறைவாக இருப்பது கூடுதல் பயத்தை ஏற்படுத்துவதாகவும், காலநிலை மாற்றம், அரசியல் மற்றும் சமூக நிலையற்ற தன்மை, பதற்றம் காரணமாகவும் பலர் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கை மக்கள் தொகை அதிகரிப்பதைப் பற்றி மட்டும் பேசாமல், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள குடும்பங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் தங்கள் ஆசையைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்ற மிகப் பெரிய பிரச்சனையையும் சுட்டிக்காட்டியுள்ளது.