வாஷிங்டன், அக்.27 -
அமெரிக்காவில் உள்ள அமெரிக்க-இஸ்லாமிய கவுன்சில் (CAIR) வியாழனன்று இஸ்ரேல்-காசா போரை நிறுத்த வலியுறுத்தி அமெரிக்க
நாடாளுமன்ற மற்றும் செனட் உறுப்பினர்களுக்கு 2,25,000 கோரிக்கைகளை இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளதாகவும், போரை முடிவுக்கு கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக பேசவேண்டும் என வலியுறுத்தும் வகையிலான நோக்கத்துடன் இந்த கோரிக்கைகளை அனுப்பியுள்ளதாகவும் அமெரிக்க-இஸ்லாமிய கவுன்சில் தெரிவித்துள்ளது.
“காசாவில் உருவாக்கப்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியை நாம் விரைவாக முடிவுக்கு கொண்டு வரவும் உடனடி போர்நிறுத்தத்திற்காகவும் குரலெழுப்ப வேண்டும்.அமெரிக்க நாடாளுமன்றம் போர் நிறுத்தம் வேண்டும் என்கிற எங்கள் குரல்களை அங்கீகரிக்காமல், போரை ஆதரிப்பவர்களின் குரல்களை மட்டும்
அங்கீகரித்து பாலஸ்தீன பொதுமக்களின் கொலைகளை நியாயப்படுத்த
முயலலாம் என அமெரிக்க-இஸ்லாமிய கவுன்சிலின் அரசு விவகார இயக்குநர் ராபர்ட் தெரிவித்துள்ளார். மேலும் “தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் பேசி விரைவாக செயல்படுவதன் மூலம் நியாயமான மற்றும் அமைதியான தீர்வை நோக்கி நாம் செல்ல முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.