world

img

மோக்கா புயல் : மியான்மரில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

 கடந்த 14 ஆம் தேதி மோக்கா புயல் கரையை கடந்ததையடுத்து மியான்மரில் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிகை 81 ஆக உயர்ந்துள்ளது.


 மோக்கா  புயல் கடந்த 14 ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் மியான்மரின் கியாக்பியு மற்றும் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் வழியாக கரையை கடந்தது. இதனால் வங்கதேசம் மற்றும் மியான்மரில் உள்ள கடலோர பகுதிகளில் மணிக்கு 200 கிமீ வேகத்தில் சூறாவளியுடன் கனமழை பெய்ததில் அங்குள்ள கிராமங்கள் முற்றிலும் சேதமடைந்தது 


 மியான்மரில் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிகை 81 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள ராக்கென் மாகாணத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்