பிப். 8 இன்று பாகிஸ்தான் அரசின் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலும் வழக்கம் போல அரசியல் பதற்றங்கள், ராணுவத் தலை யீடுகள் ஆகியவற்றுடனே நடைபெறுகிறது.
2018 தேர்தல் முதல் பாகிஸ்தானில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்த இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ. ) கட்சி பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அக்கட்சிக்கான கிரிக்கெட் மட்டை சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. சின்னம் இல்லாத சூழலில் அக்கட்சியினர் சுயேச்சையாகப் போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் முன்னாள் பிரதமராக இருந்த இம்ரானுக்கும் பல வழக்குக ளில் 31 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
இவை பி.டி.ஐ கட்சிக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ள அதே சூழலில் பாக் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீது விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு நீதிமன்றம் ஜனவரி மாதம் நீக்கியது.இது அவரது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சிக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கியுள்ளதா கவும் கூறப்படுகிறது.
எனினும் பி.டி.ஐ கட்சி சமூக வலைதள பிரச்சா ரத்தின் மூலம் முந்தைய நவாஸ் ஷெரீப் ஆட்சி யின் குறைபாடுகளை கொண்டு செல்கின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமும் அவர்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இவை எந்த அளவிற்கு பலன் கொடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் முறை
இந்தியாவை போல் பாகிஸ்தானும் இரு அவை நாடாளுமன்றத்தை கொண்டுள்ளது. பிப்.8 அன்று நாடு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பி னர் தேர்தலும் பஞ்சாப், சிந்து, கேபி , பலுசிஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களின் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.
மொத்தம் உள்ள 336 உறுப்பினர்களில் 266 பேர் நேரடி வாக்குப் பதிவு மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பெண்களுக்கு 60 இடங்களும், சிறுபான்மையினருக்கு 10 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப் பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற மேலவையான செனட்டின் 100 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி), நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்), மவுலானா ஃபஸ்லுல் ஹக் தலைமையி லான ஜமியத் உலேமா-இ-இஸ்லாம் (ஃபஸ்ல்) மற்றும் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ் தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ. ) ஆகிய கட்சி களும் இதர சில கட்சிகளும் இடது முன்னணியும் தேர்தலில் போட்டியிடுகின்றன.
பொருளாதாரப் பிரச்சனைகள்
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வலையில் சிக்கிய பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது.விலை வாசி உயர்வு, வறுமை, சுரண்டல்கள், ஒடுக்குறை, ஊழல் மற்றும் மக்கள் விரோதச் சட்டங்களும் கொள்கைகளும் தீவிரமாக அமல்படுத்தப்படுவது ஆகியவை மிக முக்கியமான பிரச்சனைகளாக எழுந்துள்ளன. ஆனால் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் எந்த முதலாளித்துவ கட்சியும் இவற்றை தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பிரச்ச னைகளாக எழுப்ப விரும்பவில்லை.மாறாக இம்ரான்கான் கட்சியின் ஊழல்களையும் முறை கேடுகளையும் மட்டுமே பேசி வருகின்றன. அந்நாட்டு ராணுவத்தின் அரசியல் தலையீடுகள் நாட்டை எப்போதும் பதற்றமான சூழலிலேயே வைத்துள்ளது. பாகிஸ்தான் அரசியல் குழப்பத்தி ற்கு அமெரிக்கா முக்கியக் காரணமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான்கானின் கட்சியினர் நாட்டின் இறை யாண்மை அமெரிக்காவின் அரசியல் அழுத்தங் கள் தங்கள் வெளியுறவுக் கொள்கைகளையும் கொரோனா கால சவால்களை அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதையும் பிரச்சாரத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இடது முன்னணி
கடந்த தேர்தலில் இரண்டு எம்.பி க்களை வென்றெடுத்த அஸ்பாந்தர் வாலி கான் தலைமை யிலான அவாமி நேஷனல் கட்சி மற்றும் பிற இடதுசாரிக் கட்சிகள், இடது ஜனநாயக முன்னணி எனும் கூட்டணியாக தேர்தலை சந்திக்கின்றன. மஸ்தூர் கிசான் கட்சி , ஹக்கூக்-இ-கல்க் ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தியுள்ளன. நாட்டின் பொருளாதார நெருக்கடிகள்,வேலையின்மை,வறுமை,விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளை தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பிரச்சனைகளாக எழுப்பி இடது ஜனநாயக முன்னணி பிரச்சாரம் செய்து வருகின்றது.